search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beggars rescued"

    • கோவில், சிக்னல்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 94 பேர் மீட்கப்பட்டனர்.
    • மீட்கப்பட்ட 10 குழந்தைகள் நலக்குழு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

    மதுரை

    மதுரையில் உள்ள பிர–சித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள் தோறும் நூற்றுக்கணக் கா–னோர் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலின் 4 நுழைவு வாயில் வழியாக கோவி–லுக்கு வரும் பக்தர்களிடம் அண்மைகாலமாக பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதி–கரித்து வருகின்றன.

    குறிப்பாக பெண்கள் கைக்குழந்தைகளை வைத் துக்கொண்டு பால், சாப் பாடு வாங்கவேண்டும் என பொதுமக்களிடம் பிச்சை எடுக்கின்றனர். இதில் சிலர் குழந்தையின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு பணம் கொடுக் கின்றனர்.

    இதேபோல் மதுரையின் முக்கிய சாலை சந்திப்புகள், காளவாசல், கோரிப்பாளை–யம், அண்ணாநகர், பால் பண்ணை உள்ளிட்ட பல் வேறு சிக்னல்களிலும் குழந் தையை வைத்து பிச்சை எடுப்பதை காணமுடிகிறது. பல மணிநேரம் சுட்டெ–ரிக்கும் வெயிலில் குழந் தையை வைத்துக் கொண்டு பிச்சை எடுப்பதால் உடல் நிலையும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

    குழந்தையை வைத்து பிச்சை எடுக்கக்கூடாது என அதிகாரிகளும், போலீசாரும் எச்சரித்தும் அந்த கும்பல் அதனை கண்டுகொள்வ–தில்லை. இந்த நிலையில் மதுரை மாநகர காவல் துறை குழந்தைகள் மீட்பு என்ற பெயரில் குழந்தைகள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், குழந்தை–கள் நலக்குழுவினர் மற்றும் சிறப்பு சிறார் ஆகிய துறை–யைச் சார்ந்த அதிகாரிகள் 6 குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் பல் வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர்

    அதன்படி மதுரை மாந–கர் அண்ணா நகர், திலகர் திடல், திடீர் நகர் பகுதியில் உள்ள சிக்னல்கள், கோவில் கள், முக்கிய சந்திப்பு பகுதிகளில் குழந்தைகளை வைத்து யாசகம் பெற்றதாக 95 பேர் மீட்கபட்டுள்ளனர். அதில் குறிப்பாக யாசகம் பெற்றதாக 50 ஆண்கள், 35 பெண்கள், 10 குழந்தைகள் என 95 பேர் மீட்கபட்டுள் ள்ளதாகவும்,குழந்தைகளை வைத்து யாசகம் செய்யும் தொழில் செய்யும் பெற் றோர்கள் மற்றும் குழந்தைக–ளுக்கு உணவுகள் வழங்கப் பட்டு விழிப்புணர்வு இல்லா பெற்றோர்களுக்கு இனி வரும் காலங்களில் யாசகம் பெறக்கூடாது என அறிவு–றுத்தி அனுப்பி வைத்தனர்.

    மேலும் யாசகம் பெறும் தொழிலில் ஈடுபடுத்தியதாக மீட்கப்பட்ட 10 குழந்தைகள் நலக்குழு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ள–தாகவும் அதிகாரிகள் தெரி–வித்துள்ளனர்.

    ×