என் மலர்
நீங்கள் தேடியது "BATTERY THIEF ARRESTED"
- 74 பேட்டரிகள் திருட்டு
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுதா கர் ( வயது 39 ) . இவர் தனியார் செல்போன் கோபுர பராமரிப்பு சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.
அரக்கோணத்தை சுற்றியுள்ள வேலூர் பேட்டை, மூதூர் , வளர்புரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள செல்போன் கோபுரங்களில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 74 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் சுதாகர் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அந்தவழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது அரக்கோணம் அடுத்த வட மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (31), சந்திரகுமார் ( 21 ) என்பதும், செல்போன் கோபுரங்களின் பேட்டரிகளை திருடியதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து பார்த்திபன், சந்திரகுமார் ஆகிய இருவர் மீதும், திருட்டு பேட்டரிகளை வாங்கியதால் உடந்தையாக இருந்ததாக பழைய இரும்பு பொருட்கள் கடை வைத்திருக்கும் அரக்கோணத்தை சேர்ந்த ஆனந்தன் ( 65 ) மீதும் தாலுகா இன்ஸ்பெக்டர் பழனி குமார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது பரூக் (25) என்பவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
- பேட்டரியை கழட்டி வர சொன்னதாக கூறி, சுமார் 1 லட்சம் மதிப்புள்ள நான்கு பேட்டரிகளை திருடி சென்று விட்டார்.
திருச்சி :
திருச்சி மாவட்டம் துறையூர் தேவாங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (32). இவர் அப்பகுதியில் போர்வெல் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரிடம் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது பரூக் (25) என்பவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கொரோனா கால ஊரடங்கின்போது பாலகிருஷ்ணனுக்கு உரிய வருமானம் இல்லாததால், முகமது பருக்கை வேலையில் இருந்து நீக்கி விட்டார்.
இந்நிலையில் சம்பவத்தன்று முசிறி பிரிவு ரோடு அருகே பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான போர்வெல் வண்டி நின்றிருப்பதை அறிந்த முகமது பருக், அங்கு சென்று அங்கிருந்த வட மாநில தொழிலாளர்களிடம் பாலகிருஷ்ணன் வண்டியில் உள்ள பேட்டரியை கழட்டி வர சொன்னதாக கூறி, சுமார் 1 லட்சம் மதிப்புள்ள நான்கு பேட்டரிகளை திருடி சென்று விட்டார்.
பின்னர் லாரியை பார்வையிட சென்ற பாலகிருஷ்ணன் லாரியில் பேட்டரி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்த தொழிலாளர்களிடம் கேட்ட பொழுது, நீங்கள் பேட்டரியை கழட்டி வர சொன்னதாக கூறி முகமது பருக் பேட்டரியை கழற்றிச் சென்றதாக கூறியதை அடுத்து இச்சம்பவம் தொடர்பாக துறையூர் காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் முகமது பருக்கை கைது செய்து, அவர் திருடிச் சென்ற நான்கு பேட்டரிகளையும் பறிமுதல் செய்தனர்.






