என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Banana Burned"
- வெற்றிவேல் என்பவர் தனது தோட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகளை பயிரிட்டுள்ளார்.
- திடீரென மின்கம்பிகள் உரசி தீப்பொறி உருவாகி சுமார் 500 வாழைகள் தீயில் கருகின.
பணகுடி:
திசையன்விளை தாலுகா கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஏழோடை என்னும் பகுதியில் தத்துவனேரியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தனது தோட்டத்தில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழைகளை சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறார்.
இவர் வாழை பயிரிட்டு வரும் இடத்திற்கு மேல் மின் கம்பிகள் சென்று கொண்டிருந்தன. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பொறி உருவாகி சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் தீப்பிடித்து தீயில் கருகின.
மேலும் அருகில் இருந்த 5 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து திசையன்விளை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மேலும் தீ வராமல் இருக்க தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டதாகவும், ரூ.2 லட்சம் மேல் நஷ்டம் ஏற்பட்டதாகவும் விவசாயி வெற்றிவேல் வேதனையுடன் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
