search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ballot"

    பழைய வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #SunilArora #ElectionCommission
    புதுடெல்லி:

    2014-ம் ஆண்டு தேர்தலின் போது மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை உருவாக்கியது.

    ஆனால் இந்த சர்ச்சையின் பின்னணியில் காங்கிரசின் சதி திட்டம் இருப்பதாக பா.ஜனதா தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலின் போது மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை தவிர்த்து விட்டு பழைய வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன. தி.மு.க., பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனீல் ஆரோரா டெல்லியில் நடந்த ஒரு விழாவில் பேசும் போது கூறியதாவது:-



    வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர மாட்டோம். ஓட்டுப்பதிவுக்கு மின்னணு எந்திரங்களே தொடர்ந்து பயன் படுத்தப்படும். அதில் எந்த வித மாற்றமும் இல்லை.

    பழைய வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவதில் நிறைய பிரச்சினைகள் உள்ளது. அதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஓட்டுப்பதிவு தொடர்பாக புதிய ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் தெரிவிக்கலாம். அதுபற்றி தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும். ஆனால் பழைய முறைக்கு செல்ல இயலாது.

    இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் சுனீல் ஆரோரா கூறினார். #SunilArora #ElectionCommission   
    ×