search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balasubiramaniyar Kolam"

    • முத்தாரம்மன் கோவிலில் மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவும், தொடர்ந்து இரவு 8 மணி வரை நடைபெறும்.
    • இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்ரமணியன் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 4-ம்நாள் ஆகும்.இதையொட்டி காலை முதல் இரவு 7 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

    மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவும், தொடர்ந்து இரவு 8 மணி வரை நடைபெறும். இரவு 9 மணிக்கு அன்னை முத்தா ரம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்ரமணியன் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    மேலும் ஏராளமான பக்தர்கள் இன்றும் காலை யிலே கடற்கரைக்கு வந்து கடல் நீர் தீர்த்தம் எடுத்து சென்றனர். இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவச மாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக் கொண்டனர்.

    காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள். அந்த காணிக்கைகளை 10-ம் திருநாள் அன்று கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள்.

    தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்பு மணி தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி செயல் அலுவலர் ராமசுப்பிர மணியன், கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ள னர்.

    ×