search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balasthapana Puja"

    • குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோவில் பாலஸ்தாபன பூஜை நடந்தது.
    • இதன் ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் ஏடு.ராதா கிருஷ்ணன் தலைமையில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பழமையும் பெருமையும் வாய்ந்த பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்பாக நடத்தப் படும் பாலஸ்தாபன பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி காலை 8 மணிக்கு விநாயகர்பூஜை, புண்யா ஹவாசனம்,வாஸ்து சாந்தி செய்யப்பட்டது.

    காலை 11.45 மணிக்கு விமானம், மூலஸ்தான சுவாமிகள், பரிவார மூர்த்திகள், கொடிமரம் உள்ளிட்ட அனைத்திற்கும் கலை இறக்கும் நிகழ்வு நடந்தது. இந்த பூஜையினை முத்துராமன் பட்டர், கார்த்திக் பட்டர் ஆகியோர் செய்தனர். இதன் ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் ஏடு.ராதா கிருஷ்ணன் தலைமையில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

    ×