search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balalaya Pooja"

    • கும்பாபிஷேக பணிகளுக்கான பாலாலய பூைஜ நடந்தது.
    • சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி, 190 ஆண்டுகளுக்கு முன்பு ஆடி மாத ரோகினி நட்சத்திரத்தில் இந்த இடத்தில் ஜீவசமாதியாக அமர்ந்தார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்தர் முத்து வடுகநாத சுவாமி ஜீவசமாதி பீடத்தில் இன்று கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலய பூைஜ நடந்தது.

    இந்த நகரில் மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கண்கண்ட தெய்வமாக விளங்கிய சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி, 190 ஆண்டுகளுக்கு முன்பு ஆடி மாத ரோகினி நட்சத்திரத்தில் இந்த இடத்தில் ஜீவசமாதியாக அமர்ந்தார்.

    வழிபாட்டுத் தலமாக மாறிய இந்த ஜீவசமாதி பீடத்தில் 1996-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    அதை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேக பணிகளுக்கான பாலாலய பூைஜ இன்று காலை 6 மணி அளவில் தொடங்கியது. யாக வேள்விகள் 10 மணி வரை நடந்தன.

    பூஜையில் கலசு ஸ்தாபனம் செய்யப்பட்டு தெய்வ சக்திகள் கலசம் பிரவேசிக்க பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து பூர்ணா குதியுடன் பூஜை நிறைவு பெற்று தீப ஆரத்தி நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் சித்தர் முத்து வடிவ நாதர் சுவாமியின் வம்சாவளியினர், வணிகர் நல சங்கத்தினர் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர். யாக வேள்விகளை தலைமை சிவாச்சாரியார் சின்னையா தலைமையில் 15-க்கும மேற்பட்டோர் நடத்தினர். திருப்பணிகள் தொடங்கி முடிந்தவுடன் கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • முருகன் கோவிலின் 8 உபகோவில்களில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜை நடைபெறுகிறது.
    • இந்த பூஜையில் பக்தர்கள் கலந்துகொள்ள நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பழனி:

    பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    முருகன் கோவிலின் 8 உபகோவில்களில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜை நடைபெறுகிறது. அதன்படி பழனி பட்டத்து விநாயகர் கோவில், பழனி கிரிவீதி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், இடும்பன் மலைக்கோவில், ஆயக்குடி சோழீஸ்வரர் கோவில், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவில் ஆகிய 5 கோவில்களில் இன்று விநாயகர் வழிபாடு, திருக்குடம் நிறுவுதல் நடக்கிறது.

    பின்னர் 7 மணிக்கு நவகோள் வழிபாடு, முதற்கால யாகம் தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு யாகம் நிறைவு பெற்று பேரொளி வழிபாடு நடக்கிறது. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு 2-ம் கால யாகம் தொடங்கி 6.15 மணிக்கு நிறைவு பெறுகிறது. 6.30 மணிக்கு நவகோள் வழிபாடு, திருக்குடம் புறப்பாடு நடைபெற்று புனிதநீர் தெளித்தல் நடக்கிறது. தொடர்ந்து திருப்பணி தொடங்குகிறது.

    இதேபோல் சண்முகநதி தூர்நாச்சிஅம்மன், பழனி வையாபுரிகரை பாதிரி விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு அனுமதி பெறுதல், விநாயகர் வழிபாடு, திருக்குடம் நிறுவுதல், நவகோள் வழிபாடு நடக்கிறது. 6.30 மணிக்கு பின் திருக்குடம் புறப்பாடு, புனிதநீர் தெளித்தல், பேரொளி வழிபாடு நடைபெற்று 7.15 மணிக்கு திருப்பணி தொடங்குகிறது.

    பழனி வேணுகோபால பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு அனுமதி பெறுதல், விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை, நவகோள் வழிபாடு, காப்புக்கட்டுதல், யாகம் நடைபெறுகிறது. பின்னர் 6.45 மணிக்கு திருக்குடம் புறப்பாடு, பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. இந்த பூஜையில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×