search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி முருகன் கோவிலின் 8 உபகோவில்களில் பாலாலய பூஜை
    X

    பழனி முருகன் கோவில்

    பழனி முருகன் கோவிலின் 8 உபகோவில்களில் பாலாலய பூஜை

    • முருகன் கோவிலின் 8 உபகோவில்களில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜை நடைபெறுகிறது.
    • இந்த பூஜையில் பக்தர்கள் கலந்துகொள்ள நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பழனி:

    பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    முருகன் கோவிலின் 8 உபகோவில்களில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜை நடைபெறுகிறது. அதன்படி பழனி பட்டத்து விநாயகர் கோவில், பழனி கிரிவீதி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், இடும்பன் மலைக்கோவில், ஆயக்குடி சோழீஸ்வரர் கோவில், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவில் ஆகிய 5 கோவில்களில் இன்று விநாயகர் வழிபாடு, திருக்குடம் நிறுவுதல் நடக்கிறது.

    பின்னர் 7 மணிக்கு நவகோள் வழிபாடு, முதற்கால யாகம் தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு யாகம் நிறைவு பெற்று பேரொளி வழிபாடு நடக்கிறது. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு 2-ம் கால யாகம் தொடங்கி 6.15 மணிக்கு நிறைவு பெறுகிறது. 6.30 மணிக்கு நவகோள் வழிபாடு, திருக்குடம் புறப்பாடு நடைபெற்று புனிதநீர் தெளித்தல் நடக்கிறது. தொடர்ந்து திருப்பணி தொடங்குகிறது.

    இதேபோல் சண்முகநதி தூர்நாச்சிஅம்மன், பழனி வையாபுரிகரை பாதிரி விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு அனுமதி பெறுதல், விநாயகர் வழிபாடு, திருக்குடம் நிறுவுதல், நவகோள் வழிபாடு நடக்கிறது. 6.30 மணிக்கு பின் திருக்குடம் புறப்பாடு, புனிதநீர் தெளித்தல், பேரொளி வழிபாடு நடைபெற்று 7.15 மணிக்கு திருப்பணி தொடங்குகிறது.

    பழனி வேணுகோபால பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு அனுமதி பெறுதல், விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை, நவகோள் வழிபாடு, காப்புக்கட்டுதல், யாகம் நடைபெறுகிறது. பின்னர் 6.45 மணிக்கு திருக்குடம் புறப்பாடு, பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. இந்த பூஜையில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×