search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayodhya Ramar Temple"

    • ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 8000 பேரில் 3500 பேர் சன்னியாசிகள், மற்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆவர்.

    உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோவில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, அயோத்தி - ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் வருகை தந்து அழைப்பிதழ் வழங்கினர்.

    இந்நிலையில், வருகிற 22-ந்தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.


    அதற்காக வரும் 21-ந்தேதியே நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவும் பங்கேற்கின்றனர்.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 8000 பேரில் 3500 பேர் சன்னியாசிகள், மற்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆவர். 8000 பேருக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உத்தரபிரதேச அரசு செய்து வருகிறது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முடித்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் வரும் 23-ந்தேதி சென்னை திரும்புகிறார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி முதல் கட்டமாக நாடு முழுவதும் 500 மாவட்டங்களில் இந்து சாமியார்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. #AyodhyaTemple
    புதுடெல்லி:

    மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்ததும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான எந்த முயற்சியையும் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க. மேற்கொள்ளவில்லை.

    இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்து மத சாமியார்கள் தீவிரப்படுத்த தொடங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) அயோத்தி செல்லும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் மக்களிடம் ஆதரவு திரட்டும் பணியை மேற்கொள்ள இந்து சாமியார்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

    கடந்த 2 தினங்களாக சுமார் 300 சாமியார்கள் ஒன்று கூடி ஆலோசித்த பிறகு இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

    முதல் கட்டமாக நாடு முழுவதும் 500 மாவட்டங்களில் இந்து சாமியார்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த பொதுக்கூட்டங்களில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய-மாநில அரசுகள் உரிய சட்டத்தை இயற்றி உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட உள்ளது.

    இந்த பொதுக்கூட்டங்கள் தவிர நாடு முழுவதும் ஊர்வலங்கள் நடத்தவும் இந்து சாமியார்கள் முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக வருகிற 25-ந்தேதி அயோத்தி, நாக்பூர், பெங்களூரு ஆகிய 3 நகரங்களில் ஊர்வலங்கள் நடத்தப்பட உள்ளது.

    நாடு முழுவதும் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவான ஊர்வலங்கள் நடத்தப்பட்ட பிறகு டெல்லியில் இந்துக்களின் மிக பிரமாண்டமான ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளனர். டிசம்பர் மாதம் 9-ந்தேதி அந்த பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.

    நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் ராமர் கோவில் தொடர்பான எழுச்சியை உருவாக்க சாமியார்கள் தீர்மானித்துள்ளனர். #AyodhyaTemple



    ×