search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "awareness training for"

    • கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கோபி தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெட்ரோல், மண்எண்ணை போன்றவற்றில் ஏற்படும் தீ விபத்துகளை தீயணைப்பு கருவியை பயன்படுத்தி அணைக்கும் முறை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கோபி தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், தீ விபத்து ஏற்படும் காலங்களில் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், எண்ணெய், பெட்ரோல் போன்ற பொருட்கள் மூலம் ஏற்படும் தீ விபத்துக்கள் குறித்தும், அவசர காலங்களில் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    கோபி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோபி முன்னணி தீயணைப்பு வீரர் கோபால், ராமச்சந்திர மூர்த்தி, தீயணைப்பு வீரர்கள் குருமூர்த்தி, சுரேஷ், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது பெட்ரோல், மண்எண்ணை போன்றவற்றில் ஏற்படும் போது தீ விபத்துகளை தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைக்கும் முறை, தண்ணீரில் நனைக்கப்பட்ட சாக்கை பயன்படுத்தி தீ அணைக்கும் முறை, மணலை பயன் படுத்தி தீயை அணைக்கும் முறை போன்றவை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×