search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australian prime minister"

    • பிரதமர் மோடிக்கு சிட்னியில் கவர்னர் ஜெனரல் அதிகாரப்பூர்வ மாளிகையில் வழங்கப்பட்ட அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
    • பிரிஸ்பேனில் புதிய தூதரகம் அமைப்பது என்ற இந்தியாவின் திட்டங்களையும் வரவேற்கிறேன்.

    பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலிய நேரப்படி நேற்று காலை அவர் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசினர். அவர்களின் பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை அதிகரிப்பது குறித்து இடம் பெற்றது.

    பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிப்பது இந்த பேச்சுவார்த்தையில் முக்கியம்சமாக இருந்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன் பிரதமர் மோடிக்கு சிட்னியில் கவர்னர் ஜெனரல் அதிகாரப்பூர்வ மாளிகையில் வழங்கப்பட்ட அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கடந்த ஆண்டு இறுதிச் செய்யப்பட்டது. தற்போது இரண்டு நாடுகளும் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்தார்.

    மேலும் அவர், "இந்தியாவின் பெங்களூரு நகரில் எங்களது தூதரகம் ஒன்று புதிதாக அமைக்கப்படும் என அறிவித்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் நடைமுறைகளுடன், ஆஸ்திரேலிய வர்த்தக நடவடிக்கைகளை இணைப்பதற்கு அது உதவும்.

    இதேபோன்று, பிரிஸ்பேனில் புதிய தூதரகம் அமைப்பது என்ற இந்தியாவின் திட்டங்களையும் வரவேற்கிறேன். ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவில் அமைய பெறும் 5-வது தூதரகம் ஆக பெங்களூரு தூதரகம் இருக்கும்" என்றார்.

    ஆஸ்திரேலியாவின் பிரதமராக பொருளாளர் ஸ்காட் மாரிசன் பதவியேற்க உள்ளார். #AustralianPM #ScottMorrison
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் ஸ்திரமற்ற தன்மை இருந்து வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர். தற்போது மால்கம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்து வருகிறார். லிபரல் கட்சியை சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரியான இவர் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வருகிறார்.

    தற்போது இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார்.


    ஆனால் அவருக்கு எதிராக ஆட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. உள்துறை மந்திரி பீட்டர் டட்டன் உள்ளிட்ட 3 மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அவர் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதில் தான் மீண்டும் போட்டியிடபோவதில்லை என மால்கம் டர்ன்புல் அறிவித்தார். அதன்படி அவர் போட்டியிடவில்லை. வெளியுறவு மந்திரி ஜுலி பிஷ்ப், பொருளாளர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர்.

    அவர்களில் ஸ்காட் மாரிசன் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். அதை தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமர் ஆகிறார். ஆஸ்திரேலியாவில் வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதுவரை இவர் பிரதமராக பதவி வகிப்பார். #AustralianPM #ScottMorrison
    ×