என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "attack on father and son"
- கோழி அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது வாழைத்தோட்டத்தில் புகுந்து பள்ளம் பறித்ததாக கூறப்படுகிறது.
- அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது மகன் சண்முகம் ஆகியோர் சண்டையை விலக்க சென்றுள்ளனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி(45). இவர் வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். இவரது கோழி அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது வாழைத்தோட்டத்தில் புகுந்து பள்ளம் பறித்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஜெயராமன் 3 பேருடன் சென்று பாண்டியை தாக்கி உள்ளார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது மகன் சண்முகம் ஆகியோர் சண்டையை விலக்க சென்றுள்ளனர்.
இதில் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தபட்டதில் இருவரும் காயமடைந்து நத்தம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக அனுமதிக ்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாண்டி நத்தம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் நத்தம் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து ஆத்திபட்டி யை சேர்ந்த ஜெயராமன் (55), விஜயகுமார் (19), ரஞ்சித் (26), அஜீத் (22) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமம் பள்ளி ரோட்டில் வசித்து வருபவர் பிரான்சீஸ் சேவியர். ( வயது 40 ). இவர் வசிக்கும் பகுதியில் அரசு புறம் போக்கு இடத்தில் பொது பாதை உள்ளது. இந்த பாதையை பலர் நீண்ட வருடங்களாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சம்மந்தப்பட்ட பாதையில் லாரியில் மண் கொண்டு வந்து நிரவிக்கொண்டிருந்தார். அதை இதே பகுதியில் வசித்து வரும் பிரான்சீஸ்சேவியர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த ஜோசப்பின் சகோதரி கிரேசி, கிரேசி அவரது கணவர் அருள், ஜான். அருண்பிரபு, பிரவீன்குமார், சேசு இமானுவேல், மெலீக்கீஸ்ராஜ் ஆகிய 7 பேரும் வீட்டில் இருந்த பிரான்சீஸ்சேவியர், அவரது தந்தை பாக்கியம் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பிரான்சீஸ் சேவியர் மற்றும் அவரது தந்தை பாக்கியம் ஆகியோர் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்த ஆரோ அருளின் ஆட்கள் மாந்தோப்பு என்ற இடத்தில் மீண்டும் வழி மறித்து தாக்கி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பிரான்சீஸ் சேவியர், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. ஆகியோரிடம் புகார் செய்தார். அதன்பேரில் திருச்சிற்றம்பலம் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் ஞானசுமதி 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்