search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM robbery attempt"

    • ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறித்து வங்கி தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்று விசாரணை நடத்துகின்றனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஸ் நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.

    இந்த ஏ.டி.எம். பிரதான சாலையில் இருப்பதால் தினமும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து பணம் எடுத்து செல்வார்கள். இதனால் இந்த ஏ.டி.எம்.மில் தினமும் ரூ.10 லட்சம் வரை நிரப்பப்படும்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு ஒரு மர்மநபர் வந்துள்ளார்.

    அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதியை அந்த நபர் உடைத்தபோது அலாரம் ஒலித்தது. இதனால் அச்சம் அடைந்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த நிலையில் அந்த வழியாக நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகனத்தில் வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் அலாரம் ஒலித்து கொண்டிருந்ததால் சந்தேகத்தின்பேரில் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர்.

    கொள்ளை முயற்சி நடந்ததை அறிந்த அவர்கள், அதுபற்றி மானாமதுரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறித்து வங்கி தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்று விசாரணை நடத்துகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை கண்டுபிடிப்பதற்காக ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ள வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது அலாரம் அடித்ததால் பணத்தை கொள்ளையடிக்க வந்த மர்மநபர் சிக்கி விடுவோம் என்று அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடிவிட்டார். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

    பிரதான சாலையில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்திருப்பது மானாமதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை மாவட்டம் காரமடை அருகே மருதூரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

    இன்று அதிகாலை 1.30 மணியளவில் முகமூடி அணிந்தபடி மர்மநபர் ஒருவர் அந்த மையத்துக்குள் நுழைந்தார். அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.

    அப்போது அங்கிருந்த அபாய ஒலி அடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்றான்.

    இந்த தகவல் வங்கிக்கு சென்றது. அவர்கள் இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திர பாபு தலைமையிலான போலீசார் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது மர்மநபர் ஏ.டி.எம். எந்திரத்தின் பின் பகுதியை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

    பின்னர் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் முகமூடி அணிந்தபடி ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து போலீசார் அக்கம் பக்கத்தில் அந்த மர்மநபர் உள்ளாரா? என தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
    வடபழனியில் ஏ.டி.எம். மையத்தில் நுழைந்த மர்மநபர்களை பணம் எடுக்க முடியாத ஆத்திரத்தில் கேமரா மற்றும் அதில் பதிவாகும் சாதனைகளை தூக்கிச் சென்றனர்.
    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளதெரு ஆற்காடு சாலையையொட்டி ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இந்த மையத்தில் நேற்று நள்ளிரவு மர்ம கும்பல் உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது. ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை வெளியே எடுக்க அவர்கள் முயற்சி செய்தனர்.

    நீண்ட நேரமாக அவர்கள் போராடியும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியவில்லை. கொள்ளையடிக்கும் முயற்சி தோல்வி அடைந்து ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

    இன்று காலையில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்திற்கு சென்றபோது கொள்ளையர்கள் பணத்தை எடுக்க முயன்றது தெரிய வந்தது. ஏ.டி.எம். எந்திரத்தின் பகுதி சேதம் அடைந்திருந்தது.

    இதுகுறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ஏ.டி.எம். மையத்தை சோதனை செய்தனர். இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஏ.டி.எம். எந்திரத்தில் பல லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. ஆனால் கொள்ளையர்களால் அதில் இருந்த பணத்தை எடுக்க முடியவில்லை.

    கொள்ளையர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் அங்கு இருந்த கேமரா மற்றும் அதில் பதிவாகும் சாதனங்களை தூக்கி சென்றுள்ளனர். கேமரா மூலம் தங்களின் உருவம் அந்த கருவியில் பதிவாகி விடும் என்பதால் இரண்டையும் திட்டமிட்டு தூக்கி சென்றுள்ளனர்.

    இதனால் கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். எந்திரத்தை மீண்டும் பராமரித்து சரி செய்த பிறகுதான் பயன்படுத்த முடியும். மேலும் அதில் பதிவாகி இருந்த கைரேகை தடயங்களையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். இதனால் அந்த ஏ.டி.எம். இன்று மூடப்பட்டு இருந்தது.
    ×