search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Atadikruti festival"

    • சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    வேலூர்:

    ஆடி கிருத்திகையை யொட்டி முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று முதல் முருகன் கோவில்களில் விழா களைகட்ட தொடங்கியது.

    ஆடிக்கிருத்திகை விழா

    இந்த நிலையில் பரணி கிருத்திகையையோட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இன்று அனைத்து முருகர் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா நடந்தது.

    ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமன பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    வேலூர் ராணிப்பேட்டை பகுதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை கோவில், கரிகிரி 66 புத்தூர் மலையில் உள்ள முருகன் கோவில், ரத்தினகிரி பாலமுருகன் கோவில், காட்பாடி காங்கேயநல்லூர் முருகன் கோவில், ஓடைப்பள்ளியார் கோவில் அமைந்துள்ள முருகன் கோவில், சைதாப்பேட்டை பழனியாண்டவர் கோவில், பாலமதி குழந்தை தண்டாயுதபாணி உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பாத யாத்திரையாக காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து திருத்தணிக்கு நேற்று முன்தினம் முதல் 170 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    வேலூர் மாவட்டத்தில் கைலாசகிரி மலை, மகாதேவமலை, வள்ளிமலை, பாலமதி உள்ளிட்ட முருகன் கோவில்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அணைக்கட்டு அருகே வேலாடும் தணிகை மலை பாலமுருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மலர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திகடன் செலுத்தினர். இதையொட்டி மூலவர் பாலமுருகன் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    • 23-ம் ஆண்டாக நடக்கிறது
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்து வருகின்றனர்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் குமரகிரி ஸ்ரீ பால முருகன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) ஆடி கிருத்திகை 23-ம் ஆண்டு விழா கொண்டாடப்படுகின்றது. இன்று பரணி காவடியை முன்னிட்டு முருகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

    நாளை சனிக்கிழமை ஆடி கிருத்திகை முன்னிட்டு காலை 4 மணிக்கு மகாபிஷேகம், காலை 10 மணிக்கு அன்னதானம் சுபம் குரூப்ஸ், மாலை 6 மணிக்கு நாதஸ்வரம், பம்பை, சிலம்பாட்டம் மாலை 7 மணிக்கு வான வேடிக்கை நடைபெறுகின்றது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஸ்ரீ பாலமுருகன் வள்ளி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்துடன் தேரில் கோவில் வருதல் போன்றவை நடைபெறுகின்றன.

    இந்த கோவிலில் பால விநாயகர் சதுர்த்தி, ஆடி கிருத்திகை பெருவிழா, கந்த சஷ்டி, பால்குடம் விழா, அன்னதானம் தைப்பூச விழா, தை கிருத்திகை விழா, பொங்கல் புத்தாண்டு விழா, பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் திரு வீதி உலா விழா, வைகாசி விசாகம் விழா, பிரதி மாதம் பிரதோஷ பூஜை, மாதாந்திர கிருத்திகை, ஆங்கில புத்தாண்டு, போன்றவை இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் ஆகும்.

    விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    ×