search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arts College"

    • மகளிர் தின விழாவிற்கு அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு பேசினார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கல்லூரி உள் அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் தீபாலட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலர் டாக்டர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளருமான விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியை தங்க செல்வி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆயிஷாள் பீவி நன்றி கூறினார். கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குனர் டாக்டர் வேலையா, உதவிப் பேராசிரியர் தனலெட்சுமி, பேராசிரியர் சிவக்குமார் மற்றும் கல்லூரியின் ஏனைய பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் போதை இல்லா உலகம் படைப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் போதை இல்லா உலகம் படைப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் உதவிப் பேராசிரியர் சங்கர் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சவுந்திர ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் தங்கப்பாண்டியன் வாழ்த்தி பேசினார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். தேசிய மாணவர் படை அலுவலர் உதவிப் பேராசிரியர் இசக்கி நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் அம்பை ஏ.எஸ்.பி. பல்பீர்சிங், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நல்லாசிரியர் கஷ்மீர் ராஜா உள்பட கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    ×