search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Artisans"

    • கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு 'பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்' மற்றும் அடையாள அட்டை கிடைக்கும்.
    • நாடு முழுவதும் 70 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிவைத்து பேசுகையில் 'பி.எம். - விஸ்வகர்மா' என்ற பெயரில் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு நிதி உதவி செய்யப்படும் என அறிவித்தார். இதை தொடர்ந்து இந்த திட்டத்திற்கு ரூ. 13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து பொருளாதார விவரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் 2023-2024 முதல் 2027-2028 வரை 5 ஆண்டுகள் அமலில் இருக்கும்.

    பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு 'பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்' மற்றும் அடையாள அட்டை கிடைக்கும். மேலும், முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். பிறகு 2-ம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும். இந்தியா முழுவதும் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள கைவினைக் கலைஞர்கள், கைவினைத் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் அடைவார்கள்.

    தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளா், காலணி செய்பவர், கொத்தனார், கூடை, பாய், துடைப்பம் தயாரிப்பவர், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், இரும்புக் கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் உள்ளிட்ட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் இந்த திட்டத்தில் நிதி பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

    முதல் ஆண்டில் 5 லட்சம் குடும்பங்களும், 5 ஆண்டுகளில் மொத்தமாக 30 லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 17-ந் தேதி 'விஸ்வகர்மா தினத்தில்' தொடங்கி வைக்கிறார். அதே நாளில் நாடு முழுவதும் 70 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அகமதாபாத்திலும், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் லக்னோவிலும், நாக்பூரில் மத்திய மந்திரி நிதின் கட்கரி, ஜான்சியில் ஸ்மிருதி இரானி, ஜெய்ப்பூரில் பூபேந்தர் யாதவ், திருவனந்தபுரத்தில் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்கிறார்கள். கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரம், அளவு மற்றும் சென்றடைவதை மேம்படுத்துவது மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலியுடன் அவர்களை ஒருங்கிணைப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    • கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கல்விக் கடன் திட்டம் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
    • தகுதியுள்ள சிறுபான்மையினர் பிரிவைச் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய அரசால் சிறுபான்மையினர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் சமண மதத்தினர் ஆகிய பிரிவினர்களுக்கு மரபு வழி கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விரசாத் என்ற மரபு உரிமை கடன் திட்டம் தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டு, தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புற மாயின் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-ன் கீழ் கைவினை கலைஞர்களில் ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம், வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.10 லட்சம் , திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

    விண்ணப்பப் படிவங்களை கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கூடிய புகைப்படம், கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை , வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து மேற்குறிப்பிட்ட உரிய ஆவண நகல்களுடன் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கடலூர் அல்லது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு பண்டக சாலை வளாகம், வெள்ளிக் கடற்கரை சாலை, கடலூர் . என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பப்படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்ட பொரு ளாதார கடனுதவி திட்டத்தினை தகுதியுள்ள சிறுபான்மையினர் பிரிவைச் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் தங்களது பொருளாதார நிலையினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×