search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Artificial leg"

    • தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாமினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • முகாமில் தகுதியான 162 நபர்களுக்கு செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டு செயற்கை கால்கள் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாமினை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, அவர்க ளுக்கு செயற்கை கால் அளவீடு செய்யும் சிகிச்சை முறை குறித்து கலெக்டர் பார்வையிட்டு தெரிவித்ததாவது,

    தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகையில், சுயதொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், சுயவேலை வாய்ப்பினை உருவாக்கிட கணினி, கைபேசி போன்ற எண்ணற்ற பயிற்சிகள் மற்றும் சக்கர நாற்காலிகள், மின்கல சக்கர நாற்காலிகள்,

    இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், நவீன செயற்கை கை மற்றும் கால், நவீன காதொலி கருவி, முடம் நீக்கும் சாதனம் போன்ற எண்ணற்ற உதவி உபகரணங்கள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறது.

    அதனடிப்படையில் மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலகம் மற்றும் சென்னை பிரீடம் டிரஸ்ட் இணைந்து நடத்திய செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாமில் தகுதியான 162 நபர்களுக்கு செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டு செயற்கை கால்கள் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.
    • மாதம் ரூ.3 ஆயிரம் என்ற அடிப்படையில் தற்காலிகமாக பகுதி நேர தூய்மைப் பணிகளுக்கான நியமன ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை கலெக்டர் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கை மற்றும் கால்களை இழந்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.

    பிற்படுத்தப்பட்டோர்,

    மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 5 பேருக்கு மாவட்ட அலகில் இயங்கி வரும் விடுதிகளில், பகுதி நேர தொகுப்பூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் என்ற அடிப்படையில் தற்காலிகமாக பகுதி நேர தூய்மைப் பணிகளுக்கான நியமன ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சிந்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சமையல் உதவியாளராக பணியாற்றி மரணமடைந்த செல்லேசுவரி என்பவரது வாரிசுதாரரான கவிதாவுக்கு அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையையும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) சங்கர நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஞானவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×