என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "are camped and"
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் பவானிசாகர் அணையின் கரையை யொட்டி உள்ள பகுதியில் முகமிட்டுள்ளன.
- காட்டு யானைகள் அணையில் கரைப்பகுதியில் முகாமிட்டு உள்ளதை கண்ட பொது பணித்துறை ஊழியர்கள் அச்சமடை ந்துள்ளனர்.
ஈரோடு:
பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியையொட்டி பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதி–யில் வசிக்கும் காட்டு யானைகள் குடிநீர் தேடி பவானிசாகர் அணை பகுதிக்கு வந்து செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் பவானி சாகர் அணையின் கரையை யொட்டி உள்ள பகுதியில் முகமிட்டுள்ளன. கரைப்ப குதியில் உள்ள தீவனங்களை உட்கொண்ட காட்டு யானைகள் ஜாலியாக விளையாடி மகிழ்ந்தன.
காட்டு யானைகள் அணையில் கரைப்பகுதியில் முகாமிட்டு உள்ளதை கண்ட பொது பணித்துறை ஊழியர்கள் அச்சமடை ந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பவானிசாகர் அணை–யின் கரையில் நடமாடும் காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள முட்புதற் காட்டில் இரவு நேரத்தில் முகாமிடுவதால் பவானிசாகர் அணை மற்றும் கரை பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோர் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொது ப்பணித்துறையினர் மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கரைப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்