search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "archive were"

    • சத்தியமங்கலத்தில் காப்பகத்தில் தங்கி இருந்த 2 மாணவர்கள் மாயமானர்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி காணாமல் போன மாணவர்களை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் அப்துல்பாஷா. இவரது மகன் அப்துல்ரகுமான் (13). இவர் சத்தியமங்கலம் ராஜன்நகரில் உள்ள கஸ்தூரிபா நிகேதன் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இதேபோல் ஈரோடு பழைய ெரயில்வே ஸ்டேசன் ரோடு பகுதியை சேர்ந்த பீர்முகமது மகன் அப்துல்ரசாக் (11). இவரும் அதே காப்பகத்தில் தங்கி 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பகத்தை விட்டு வெளியே சென்ற 2 பேரும் பண்ணாரியில் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் 2 பேரும் காப்பகத்தில் இருந்து மீண்டும் மாயமாகினர். பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து காப்பக பொறுப்பாளர் முரளிதரன் சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி காணாமல் போன மாணவர்களை தேடி வருகின்றனர்.

    ×