search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "apllication"

    • தேர்வில் தோல்வியடைந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலை 25ந் தேதி முதல் துணைத்தேர்வு நடக்கவுள்ளது.
    • 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்டு 2ம் தேதி முதல் துணைத்தேர்வு நடக்கவுள்ளது.

    உடுமலை :

    பிளஸ் 2 மற்றும்10-ம் வகுப்புகளுக்கு, துணைத்தேர்வு எழுத விரும்புவோர் வரும் 4ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    கடந்த 20ந் தேதி 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 395 பேர் பிளஸ் 2 தேர்வெழுதினர். இவர்களில் 23 ஆயிரத்து 559 பேர் தேர்ச்சி பெற்றனர். 10ம் வகுப்பு தேர்வை, 29 ஆயிரத்து, 631 பேர் எழுதினர். இவர்களில் 26 ஆயிரத்து 612 பேர் தேர்ச்சி அடைந்தனர். தேர்வில் தோல்வியடைந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலை, 25ந் தேதி முதல் ,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்டு 2ம் தேதி முதல் துணைத்தேர்வு நடக்கவுள்ளது.

    இத்தேர்வு எழுத விரும்புவோர் ஜூலை, 4 ந் தேதிக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×