என் மலர்
நீங்கள் தேடியது "Anti-Plastic Awarness Rally"
- சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
- பேரணியில் மாணவர்கள் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சாம்பவர்வடகரை:
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் இளையோர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பேரணியில் மாணவர்கள் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளான அளவில் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு சீருடை தொகுப்புகள் வழங்கப்பட்டது.






