search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annasami thambiraan"

    • வடக்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி மீனாட்சி அம்மன் தரிசனம் தருகிறார்.
    • பக்கத்திலேயே ஆறுமுகன், வள்ளி தெய்வானையுடன் செப்புத் திருமேனிகள் தனி சன்னதி இருக்கிறது.

    தெற்கு நோக்கியுள்ள கண்களை கவரும் வண்ணக் கோபுரத்தை கடந்து உள்ளே சென்றதும் முதலில் வரசித்தி விநாயகர் சன்னதி இருக்கிறது.

    அவரை வணங்கி பிரகாரத்திற்கு வந்தால் கொச்சநாதர் சன்னதி, அதைத் தொடர்ந்து மேலண்டை பிரகாரத்தை வலம் வந்து வடக்கு பிரகாரத்திற்கு வந்தால் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் சன்னதி.

    பழனி ஆண்டவரை செவ்வாய் கிரகமாக கருதப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் செவ்வாய் கிரகத்திற்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

    கிழக்கு பிரகாரத்தில் அருணகிரிநாதர் சன்னதி, அனுமான் சன்னதிகளும் இருக்கின்றன.

    உயர்ந்த கொடிக்கம்பம், மயில் வாகனம், இவற்றை கடந்து கர்ப்பகிரகத்திற்கு செல்லும் மண்டபம், அதன் மேல் பகுதிகளில் கந்தனின் முக்கிய திருவிளையாடல் சிற்பங்களை காணலாம்.

    கர்ப்பகிரகத்தில் கிழக்கு நோக்கி ஆண்டிக்கோலத்தில் தரிசனம் தருகிறார் வடபழனி ஆண்டவர்.

    கர்ப்பக் கிரகத்தின் சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, காளி, பைரவர், மகாலட்சுமி, சண்டிகேசர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

    வடக்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி மீனாட்சி அம்மன் தரிசனம் தருகிறார்.

    பக்கத்திலேயே ஆறுமுகன், வள்ளி தெய்வானையுடன் செப்புத் திருமேனிகள் தனி சன்னதி இருக்கிறது.

    பழனியைப் போலவே இங்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    திருவிழாக்களும் முறைப்படி நடக்கின்றன.

    தென்பழனிக்கு செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து வ-டபழனி ஆண்டவருக்கு பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள்.

    • ஸ்ரீ அண்ணாசாமியார் பழனியில் இருந்து கொண்டுவந்த திருவுருவப் படம் இப்போதும் இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மண்டபத்தில் இருக்கின்றது.
    • இப்போதுள்ள கோவிலின் தென்கிழக்குப் பக்கத்தில் பழைய குறிமேடை இருந்த இடம் இன்னும் இருக்கின்றது.

    இந்நிலையில் 1931&ம் ஆண்டு புரட்டாசி மாதம் தசமி திதி கூடிய பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீ பாக்கியலிங்கத் தம்பிரான் பழனி ஆண்டவர் திருவடியைப் பாங்குற அடைந்தார்.

    அவருக்கு உரிய முறையில் பூஜை முதலிய சிறப்புக்களுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    இம்மூவருடைய சமாதிப் பூசையும் வழிபாடும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இம்மூவரின் சமாதிகளும் வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு மிக அருகில் இருக்கின்றன.

    ஸ்ரீ பாக்கியலிங்கத் தம்பிரானுக்குப் பின்னர் அவர்கள் முறையைப் பின்பற்றிக் குறி சொல்லத்தக்கவர் ஒருவரும் அமையவில்லை.

    இப்போதுள்ள கோவிலின் தென்கிழக்குப் பக்கத்தில் பழைய குறிமேடை இருந்த இடம் இன்னும் இருக்கின்றது.

    ஸ்ரீ அண்ணாசாமியார் பழனியில் இருந்து கொண்டுவந்த திருவுருவப் படம் இப்போதும் இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மண்டபத்தில் இருக்கின்றது.

    • இவர் தம் குறி சொல்லும் ஆற்றலால், அன்பர்கள் பெருந்திரளாகக் கூடி வந்தனர்.
    • கோவிலின் வளர்ச்சியும் புகழும் நாளடைவில் பெருகின.

    தம் குருநாதரின் மறைவுக்குப் பின்னர் பாக்கியலிங்கத் தம்பிரான், கோவில் பணிகளை மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து அரும்பாடுபட்டுக் கவனித்து வந்தார்.

    இப்போதுள்ள வடபழனித் திருக்கோவிலின் கருப்பக்கிரகமும், முதல் உட்பிரகாரத்திருச்சுற்றும், கருங்கல் திருப்பணியாகச் செய்வித்தவர் ஸ்ரீ பாக்கியலிங்கத் தம்பிரான் ஆவர்.

    வடபழனிக் கோவிலுக்கு இவர் பாவாடம் தரித்துக் கொண்ட நாள் முதல், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் பணிபுரிந்திருக்கின்றார்.

    இவருடைய காலத்தில்தான், இவர்தம் சிறந்த அருட்பெரும் முயற்சிகளின் பயனாகவே, ஸ்ரீ வடபழனி ஆண்டவர் கோவில் மிகவும் பெரும் புகழ் பெறுவதாயிற்று.

    சொல்லியது சொல்லியபடியே தவறாது பலித்து வந்தது.

    இவர் தம் குறி சொல்லும் ஆற்றலால், அன்பர்கள் பெருந்திரளாகக் கூடி வந்தனர்.

    கோவிலின் வளர்ச்சியும் புகழும் நாளடைவில் பெருகின.

    • நாளடைவில் வடபழனிக் கோவிலின் புகழ் சென்னை நகர் முழுவதும் விரைந்து பரவுவதாயிற்று.
    • ரத்தினசாமித் தம்பிரான் சுமார் இருபது ஆண்டுகள் கோவிலைச் சிறப்புறப் போற்றி நடத்தி வந்தார்.

    கும்பாபிஷேகத்திற்குப் பிறகு கோடம்பாக்கம் குறி மேடையை, வடபழநி ஆண்டவர் கோவில் என்று வழங்கும்படி ரத்தினசாமித் தம்பிரான் அனைவரிடமும் கூறி வந்தார்.

    நாளடைவில் வடபழனிக் கோவிலின் புகழ் சென்னை நகர் முழுவதும் விரைந்து பரவுவதாயிற்று.

    ரத்தினசாமித் தம்பிரான் சுமார் இருபது ஆண்டுகள் கோவிலைச் சிறப்புறப் போற்றி நடத்தி வந்தார்.

    அவருக்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்தவரும், செங்குந்தர் குலத்தில் தோன்றியவரும் ஆகிய பாக்கியலிங்கத் தம்பிரான் என்பவர், ரத்தினசாமித் தம்பிரானின் அன்பிற்குரிய சீடராக அமைந்தார்.

    அவரும் தம் குருவின் திருவுள்ளக் குறிப்பிற்கேற்ப முறைப்படி நோன்பிருந்து துறவு பூண்டு காவி உடை புனைந்து வழிபாடுகள் நிகழ்த்தித் தம் நாக்கை அரிந்து இறைவன் திருமுன் படைத்து பாவாடம் தரித்துக் கொண்டார்.

    தம் குடும்பத்தில் தமக்குரிய சொத்தின் பங்கைக் கேட்டுப் பெற்று, பழநி ஆண்டவர் கோவிற் பணிகளுக்கே பயன்படுத்தினார்.

    தம் குருவின் திருவுள்ளம் மகிழும்படி கோவில் பூஜைகளையும் முறையாக நடத்திவந்தார். இவருக்கும் இறைவன் அருளால் குறி சொல்லும் ஆற்றல் உண்டாயிற்று.

    குருவும் சீடருமாக மனமொத்துப் பழனியாண்டவருக்கு ஒரு சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்தனர்.

    1886-&ம் ஆண்டு அளவில், மார்கழி மாதம் சஷ்டி நாளில் சதய நட்சத்திரத்தன்று ஸ்ரீ ரத்தினசாமித் தம்பிரான் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.

    • மக்கள் அவரைத் தம்பிரான் என்று அன்புடன் அழைக்கலாயினர்.
    • அடுத்த கிருத்திகை முதல் ரத்தினச்சாமித் தம்பிரானும் ஆவேசமுற்றுக் குறிசொல்லும் ஆற்றல் பெற்றார்.

    ஒரு நாள் அவர்தம் கனவில் ஸ்ரீ அண்ணாசாமித் தம்பிரான் தோன்றி, அவரையும் தம்மைப் போலவே பாவாடம் தரித்துக் கொள்ளுமாறு பணித்தார்.

    அவ்வாறே ஓர் ஆடிக் கிருத்திகையன்று முறையாக நோன்பிருந்து வழிபாடுகள் செய்து நாக்கை அறுத்து இறைவன் திருமுன் வைத்து வழிபட்டார்.

    அன்றே அவர் காவி உடையும் புணைந்து கொண்டு துறவியானார்.

    மக்கள் அவரைத் தம்பிரான் என்று அன்புடன் அழைக்கலாயினர்.

    அடுத்த கிருத்திகை முதல் ரத்தினச்சாமித் தம்பிரானும் ஆவேசமுற்றுக் குறிசொல்லும் ஆற்றல் பெற்றார்.

    பின் சில நாட்களில் அண்ணாசாமித்தம்பிரான் விரும்பியபடியே தொடங்கப் பெற்ற கோவில் திருப்பணி சிறப்புற நிறைவேறியது.

    பழனியாண்டவர் சிலையும் பிரதிஷ்டை செய்யப் பெற்றுக் கும்பாபிஷேகமும் நன்கு நிறைவேறியது.

    வழக்கம் போல் குறி கேட்க வரும் அன்பர்கள் கொடுக்கும் காணிக்கைப் பொருளைக் கொண்டே ரத்தினசாமித் தம்பிரான் திருக்கோவில் பூஜை முதலிய செலவுகளை நல்லமுறையில் நடத்திக் கொண்டு வந்தார்.

    • பெரியவரை அணுகவும் அவருக்கு இயலவில்லை, பேசவும் அவரால் முடியவில்லை.
    • பேசாமல் பின் தொடர்ந்தார். காவி உடை அணிந்தவர் குறி மேடைவரை வந்து அங்கிருந்த கோவிலுக்குள் நுழைந்தார்.

    மறுநாள் ஒன்றும் புரியாத நிலையில், ஆண்டவர் சன்னிதியை விட்டுப் பிரியவும் மனமின்றி, வீட்டுக்குச் செல்லவும் விருப்பமின்றி, அன்று மாலையில் கடைக்குச் சென்றார்.

    மூடியிருந்த கடையைத் திறந்தபோது காவி உடை தரித்த யாரோ ஒரு பெரியவர் அங்கிருந்து வெளிப்பட்டுச் செல்வது போலத் தோன்றக் கண்டார்.

    கடையை அப்படியே விட்டு விட்டு அவர்தம் அடிச்சுவட்டைப் பின்பற்றி உடன் சென்றார்.

    பெரியவரை அணுகவும் அவருக்கு இயலவில்லை, பேசவும் அவரால் முடியவில்லை.

    பேசாமல் பின் தொடர்ந்தார். காவி உடை அணிந்தவர் குறி மேடைவரை வந்து அங்கிருந்த கோவிலுக்குள் நுழைந்தார்.

    பின் வந்த செட்டியார் உள்ளே புகுந்த போது பெரியவரைக் காணவில்லை.

    அதனால் திகைப்பும் வியப்பும் அடைந்தார், செட்டியார். அருகிருந்தவர்களும் நிகழ்ந்ததை அறிந்து வியப்பு மேலிட்டனர்.

    இத்தகைய சில நிகழ்ச்சிகளால் செட்டியார், குடும்பப் பற்றுத் தவிர்த்து துறவு நெறி உணர்வு பெருகி, ஆண்டவர் சன்னிதியிலேயே இருந்து கொண்டு வழிபாடு செய்யத் தொடங்கினார்.

    • அன்று முதல் செட்டியாருக்கு அடிக்கடி தாம் காவி உடை உடுத்தி இருப்பது போன்ற உணர்வு அவ்வப்போது வரலாயிற்று.
    • அன்பர்கள் பலர் செய்த பொருளுதவியினால் திருப்பணி விரைவில் நிறைவேறியது.

    மறுநாளே, செட்டியார் வண்ணையம்பதிக்குச் சென்று தமக்குத் தெரிந்த ஒரு ஸ்தபதியாரிடம் பழனி ஆண்டவர் சிலையொன்று செய்யும்படி ஏற்பாடு செய்தார்.

    அன்று முதல் செட்டியாருக்கு அடிக்கடி தாம் காவி உடை உடுத்தி இருப்பது போன்ற உணர்வு அவ்வப்போது வரலாயிற்று.

    பின்னர் சில நாட்களில் ஒரு நல்ல நாள் பார்த்துச் செட்டியாரே அண்ணாசாமித் தம்பிரானின் திருவுள்ளக்குறிப்பின்படி, கோவில்

    திருப்பணியை முன்நின்று தொடங்கினார்.

    குறிமேடை அருகில், இப்போது வடபழனி ஆண்டவர் திருக்கோவிலின் கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல் சுண்ணாம்புக் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது.

    அன்பர்கள் பலர் செய்த பொருளுதவியினால் திருப்பணி விரைவில் நிறைவேறியது.

    இது சுமார் கி.பி.1865-ம் ஆண்டாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் ஆவணிமாதம் அமாவாசைத் திதி மகநட்சத்திரத்தன்று அண்ணாசாமித் தம்பிரான் ஆண்டவர் திருவடியை அடைந்து விட்டார். அன்பர்கள் பெரிதும் வருந்தினர்.

    அப்போது தான் ரத்தினசாமிச் செட்டியாருக்குத் தம்பிரான், ஏன் தம்மை இங்கேயே இருந்து கொண்டு, தொண்டு செய்து வரும்படி விரும்பிப் பணித்தார் எனும் குறிப்பும் நுட்பமும் தெரிந்தன.

    தம்பிரானின் திருமேனியை உரிய முறையில் பூசித்துக் குறிமேடை அருகில் சிறப்பாக அடக்கம் செய்தார், ரத்தினசாமிச் செட்டியார்.

    • தாங்களே வாய்திறந்து பணித்த பின்னர் அதனை நிறைவேற்றுவதில் என்ன தடை ?
    • இன்றைக்கே கோவில் திருப்பணிக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யலாம்.

    செட்டியாரின் அன்பையும் ஆர்வத்தையும் அறிந்த தம்பிரான் சில காலம் கழித்து நமக்குப்பின் இவ்வழிபாட்டைத் தொடர்ந்து செய்யக் கூடியவர் இவரே ஆவார் என தெரிந்து ரத்தினசாமிச் செட்டியாரை அன்புடன் அருகில் அழைத்து நீர் இங்கேயே இருந்து ஆண்டவருக்குத் தொண்டு செய்தல் இயலுமா' என்று வினவினார்.

    ரத்தின சாமியார் எதிர்பாராத நிலையில் வினா எழவே மிகவும் தயங்கி அடியேன் குடும்பத்தவன் ஆயிற்றே!

    என்னால் எங்ஙனம் இயலும் ஏதேனும் இயன்ற தொண்டுகளை மட்டும் நான் செய்து வருகிறேன் என்று பணிவுடன் தெரிவித்தார்.

    அதை கேட்ட தம்பிரான், இக் கீற்றுக் கொட்டகையை மாற்றி இங்குப் பழனி ஆண்டவருக்கு ஒரு சிறிய கோவில் கட்ட வேண்டுமென்று என் உள்ளம் விரும்புகின்றது.

    தாங்கள் இதற்கு ஏதேனும் உதவி செய்தல் இயலுமா?' என்றார்.

    உடனே செட்டியார், அப்படியே செய்யலாம். தங்கள் விருப்பம் போலவே அன்பர்களுக்கும் இக்கருத்து உள்ளது.

    தாங்களே வாய்திறந்து பணித்த பின்னர் அதனை நிறைவேற்றுவதில் என்ன தடை ?

    இன்றைக்கே கோவில் திருப்பணிக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யலாம்.

    தாங்கள் இசைவு தெரிவித்தால், பழனி ஆண்டவர் சிலை ஒன்றையும் அழகுற அமைத்து கோவில் நிறுவி கும்பாபிஷேகமும் விரைவில் செய்து விடலாம்" என்று மிகவும் பேரார்வத்துடன் தெரிவித்தார்.

    அண்ணாசாமித்தம்பிரான், ஆண்டவன் பணிக்கு எம்முடைய இசைவு எதற்கு தங்கள் உள்ளத்தில் தோன்றுகிறபடியே திருப்பணிக்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று சொல்லிச் செட்டியாருக்குத் திருநீறு கொடுத்து அனுப்பிவிட்டார்.

    • அன்று நிகழ்ந்த வழிபாட்டில் உள்ளத்தைப் பறி கொடுத்தார்.
    • அன்று முதல் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தோறும் வழிபாட்டுக்கு வந்து கலந்து கொண்டார்.

    அண்ணாசாமித் தம்பிரானின் அரிய பக்தியையும், குறி சொல்லும் சிறப்பையும் கேள்வியுற்று அவரை நாடிய அன்பர்கள் பற்பலர்.

    அவர்களுள் தேனாம்பேட்டையில் வாழ்ந்து வந்த ரத்தினசாமிச்செட்டியார் என்பவரும் ஒருவர்.

    அவர் ஆயிரம் விளக்குப்பகுதியில் ஒரு மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார்.

    1953-ம் ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று முதன் முதலில் செட்டியார் அண்ணசாமி தம்பிரானை கண்டார்.

    அன்று நிகழ்ந்த வழிபாட்டில் உள்ளத்தைப் பறி கொடுத்தார்.

    அன்று முதல் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தோறும் வழிபாட்டுக்கு வந்து கலந்து கொண்டார்.

    தம்முடைய செலவில் பழனி ஆண்டவருக்குப் பூ, பழம், ஊது வத்தி, கற்பூரம் ஆகிய வழிபாட்டுப் பொருள்களை வாங்கி வந்து கொடுப்பது அவருக்கு வழக்கமாயிற்று.

    ×