search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambition"

    • மாணவர்கள் எதிர்கால இலக்குகளை முடிவு செய்து லட்சியத்துடன் செயல்பட வேண்டும் என்று தொழிலதிபர் தெரிவித்துள்ளார்
    • ஊக்கத்தொகையும் வழங்கி பாராட்டினார்

    பெரம்பலூர்:

    இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின விழா வழக்கத்தை விட கூடுதல் உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது.

    விழாவில் மலேசியா தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவர் மாணவர்களுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட வைகளையும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கி பாராட்டினார்.

    பின்னர் அவர் பேசுகையில், மாணவர்கள் தங்கள் எதிர்கால இலக்குகளை முடிவு செய்து தற்போதிருந்தே லட்சியத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பூலாம்பாடி அரசு பள்ளியில் பயின்று மருத்துபடிப்பிற்கு நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு தான் உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    அதைத்தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவில் பள்ளிதலைமை ஆசிரியர் சேகர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன், பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், கவுன்சிலர் கலைச்செல்வி பாலகிருஷ்ணண் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    • ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கு மதுரை வீரர் தகுதியானார்.
    • ஆசிய போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம்” என்று தெரிவித்து உள்ளார்.

    மதுரை

    மதுரை கருப்பாயூரணியை சேர்ந்தவர் பாலகுமரன் (வயது 30). இவர் தேசிய-மாநில அளவில் நடக்கும் பாக்சிங், கிக் பாக்சிங், டேக்வாண்டோ ஆகிய போட்டிகளில் கடந்த 8 ஆண்டுகளாக பங்கேற்று பதக்கம்-விருதுகளை குவித்து வருகிறார்.

    இந்தோனேசியா நாட்டில் ஆசிய குத்துச்சண்டை போட்டி, அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பாலகுமரன் பங்கேற்க உள்ளார். ஆசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு இந்தியா சார்பில் மதுரை வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளது.

    இது தொடர்பாக பாலகுமரன் கூறுகையில், தேசிய அளவிலான பாக்சிங், கிக் பாக்சிங் போட்டிகளில் பங்கேற்று பல முறை 2-வது பரிசை வென்று உள்ளேன். அதேபோல சர்வதேச- தேசிய டேக்வாண்டோ போட்டிகளில் தங்கபதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளேன். ஆசிய குத்துசண்டை போட்டியில் தற்காப்பு கலை (எம்.எம்.ஏ) பிரிவில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் கேரளாவில் நடந்தது. இதில் வெற்றி பெற்று அடுத்த மாதம் இந்தோனேசியாவில் நடக்க உள்ள போட்டியில் கலந்து கொள்கிறேன். ஆசிய போட்டியில் 18 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறேன். ஆசிய போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம்" என்று தெரிவித்து உள்ளார்.

    ×