search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் எதிர்கால இலக்குகளை முடிவு செய்து லட்சியத்துடன் செயல்பட வேண்டும் - தொழிலதிபர் பேச்சு
    X

    மாணவர்கள் எதிர்கால இலக்குகளை முடிவு செய்து லட்சியத்துடன் செயல்பட வேண்டும் - தொழிலதிபர் பேச்சு

    • மாணவர்கள் எதிர்கால இலக்குகளை முடிவு செய்து லட்சியத்துடன் செயல்பட வேண்டும் என்று தொழிலதிபர் தெரிவித்துள்ளார்
    • ஊக்கத்தொகையும் வழங்கி பாராட்டினார்

    பெரம்பலூர்:

    இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின விழா வழக்கத்தை விட கூடுதல் உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது.

    விழாவில் மலேசியா தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவர் மாணவர்களுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட வைகளையும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கி பாராட்டினார்.

    பின்னர் அவர் பேசுகையில், மாணவர்கள் தங்கள் எதிர்கால இலக்குகளை முடிவு செய்து தற்போதிருந்தே லட்சியத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பூலாம்பாடி அரசு பள்ளியில் பயின்று மருத்துபடிப்பிற்கு நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு தான் உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    அதைத்தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவில் பள்ளிதலைமை ஆசிரியர் சேகர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன், பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், கவுன்சிலர் கலைச்செல்வி பாலகிருஷ்ணண் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×