search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amaravathi sugar mill"

    • வருவாய்த்துறை - வேளாண்துறை இணைந்து சிறப்பு முகாம் அமைத்து தீர்வு காண வேண்டும்.
    • விவசாயி முன்னுரிமை இழந்து விட்டால் மீண்டும் மின் இணைப்புகிடைக்க 20 ஆண்டுகள் கூட ஆகலாம்.

    உடுமலை :

    உடுமல கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு உடுமலை ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார்.உடுமலை தாசில்தார் கண்ணாமணி, மடத்துக்குளம் தாசில்தார் செல்வி ஆகியோர் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- குடிமங்கலம் பகுதியில் இயங்கி வரும்கா லாவதியான காற்றாலைகளை அப்புறப்படுத்த வேண்டும். உப்பாறு ஓடையில் கேரள க்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். குடிமங்கலம் பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால் தட்டுப்பாடு நிலவுகிறது. கிசான் சம்மான் நிதி பல விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது. வருவாய்த்துறை-வேளாண்துறை இணைந்து சிறப்பு முகாம் அமைத்து தீர்வு காண வேண்டும். அரசு கொப்பரை கொள்முதல் தொடங்க உள்ள நிலையில் உழவர்உற்பத்தியாளர் நிறுவனங்களிடமும் கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் சிறு விவசாயிகள் பலன் பெறுவார்கள்.

    கோவை மாவட்டத்தில் குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் நமது பகுதியிலும் அனுமதி வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகள் பயிர்களை மட்டுமல்லாமல் வட்டப் பாத்திகளையும் சேதப்படுத்தி விடுகிறது. கால்நடைகளுக்கான தீவனத்தை தின்று விடுகிறது.அவற்றைத் தடுக்க முயற்சித்தால் விவசாயிகளின் மீது வழக்கு போடப்படுகிறது. மருந்து கலந்த விதைகளே விற்பனைக்கு வருகின்றன. பூச்சி மருந்து தெளிக்காமல் எந்த விவசாயமும் சாத்தியமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.ஆனால் மருந்து தெளித்த தக்காளிப் பழத்தையோ, மருந்து கலந்த விதையையோ தின்று மயில் உயிரிழந்தால்விவசாயி குற்றவாளி யாக்கப்படுகிறான். விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்குகவுர் வாய்க்கால்,கொப்பு வாய்க்காலுக்கு தேவையில்லாத நிலையிலும் பொதுப்பணி த்துறையிடம் தடையில்லா சான்று கேட்டு மின்வாரியத்தினர் அலைக்கழிக்கிறார்கள். இதனால் விவசாயி முன்னுரிமை இழந்து விட்டால் மீண்டும் மின் இணைப்புகிடைக்க20 ஆண்டுகள் கூட ஆகலாம்.எனவேதடையில்லாமல் விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும். மருள்பட்டி உள்ளிட்டபகுதிகளில் முறையானஆய்வுகள் இல்லாமல்பாசனக்கா ல்வாய்களையொட்டி வீட்டு மனை அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது.இதனால் கால்வாய்கள் அழிக்கப்படுகிறது.சில பகுதிகளில் வாய்க்கால்களில் நேரடியாக கழிவறைக்குழாய் இணைக்கப்பட்டு கழிவுகள் கலக்கப்படுகிறது.இதனைத் தடுக்க வேண்டும்.அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லர், கிரேன்,எடைமேடை உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது. முறையான பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ள நிலையில் திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் 20ந்தேதி அரவை தொடங்குமா என்பது கேள்விக்கு றியாகவே உள்ளது. தொடங்கி னாலும் இடைநிற்றல் இல்லாமல் முழுமையாக இயங்குமா என்ற சந்தேகம் உள்ளது. சுமார் 3 ஆயிரம் ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள விவசாயி களை பதிவு செய்ய வைக்கவும், சிறப்பாக ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுக்கம்பா ளையம்-குண்டலப்பட்டி சாலை உட்பட பல கிராம இணைப்புச் சாலைகள் சேதமடைந்துள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும். ஒரு ஏக்கரில் தென்னை சாகுபடி செய்தால் 1000 கிலோவுக்கு மேல் கொப்பரை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் ஒரு ஏக்கருக்கு 291 கிலோ மட்டுமே அரசு கொள்முதல் மையங்களில் கொ ள்முதல் செய்யப்படவுள்ளது. எனவே முழுமையாக கொள்மு தல் செய்ய வேண்டும். திருமூர்த்தி அணையில் மிகக் குறைந்த அளவில் நீர் இருப்பு உள்ள காலங்களில் கூட முழுமையாக குடிநீர் விநியோகம் செய்யப்ப ட்டது. தற்போது நிர்வாக குளறுபடிகளால்குடிநீர் விநியோகத்தில்சிக்கல் ஏற்படுகிறது. எனவே மக்கள் தொகை அடிப்படையில் முழுமையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமங்கலம் ஒன்றியம் ஆத்துக்கிணத்துப்பட்டியில் 2009 ம் ஆண்டு நிலசீர்திருத்த சட்டத்தில் எடுக்கப்பட்ட நிலம் நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது ஆக்கிரமிப்பிலுள்ள 116 ஏக்கர் நிலத்தை உரியவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எலையமுத்தூர் பகுதியில் பன்னாட்டு நிறுவ னத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலத்தை ஏழை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். லாரி லாரியாக நான்கு வழிச்சாலைக்கு மண் எடுக்க அனுமதி கிடைக்கிறது.கேரளாவுக்கு மண் செல்கிறது.ஆனால் விவசாயிக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை.இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறையாக கடன் தொகையை திருப்பி செலுத்தி ரசீது பெற்றுள்ள விவசாயிகளுக்கு மீண்டும் கடன் மறுக்கப்ப டுகிறது.அவர்களுக்கு கடன் கிடைக்க நடவடிக்கை எடு க்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

    ×