search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aluminum Freight Rail Box"

    • மதுரை கோட்டத்தில் பயன்பாட்டுக்கு வரும் அலுமினிய சரக்கு ரெயில் பெட்டி
    • அலுமினிய ரெயில்பெட்டிகளை மதுரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை

    இந்தியாவில் தற்போது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிவேக 'வந்தே பாரத் ெரயில்', தமிழகத்தில் உள்ள ெரெயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக ெரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனம், இந்துஸ்தான் அலுமினியம் கார்ப்பரேஷன், பாரத் எலக்ட்ரிக் இரும்பு நிறுவனம் ஆகியவை இணைந்து எடை குறைந்த அலுமினிய சரக்கு ரெயில்பெட்டியை தயாரித்து உள்ளன.

    இது திறந்த நிலையில் உள்ள பெட்டிகள் ஆகும். இதில் நிலக்கரி, சரளை கற்கள், இரும்பு தளவாட பொருட்கள் போன்றவற்றை அனுப்ப முடியும்.

    அதுவும் தவிர இந்த ரெயில்பெட்டி, தற்போது பயன்பாட்டில் உள்ள பெட்டியை விட 3.25 டன் எடை குறைவானது. அதே நேரத்தில் 180 டன் கூடுதல் சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். எடை குறைவாக இருப்பதால், எரிபொருள் நுகர்வு குறைவாக இருக்கும். அலுமினிய ரெயில்பெட்டிகளை 80 சதவீதம் மறு விற்பனைக்கு உட்படுத்தலாம். துரு பிடிக்காது என்பதால் பராமரிப்பு செலவு குறைவு.

    தற்போதைய இரும்பு சரக்கு பெட்டிகள் தயாரிக்க நிக்கல், காட்மியம் போன்ற மூலப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. இதன் மூலம் இறக்குமதியை குறைத்து அன்னிய செலவாணியை சேமிக்க இயலும். உள்ளூர் அலுமினிய தொழிற்சாலை களும் வளர்ச்சி பெறும்.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரர் ரெயில்நிலை யத்தில் இருந்து அலுமினிய ரெயில்பெட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கான சேவையை மத்திய ெரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்து உள்ளார்.

    மதுரை கோட்டத்தில் இருந்து நிலக்கரி, உரம், சரளைக்கற்கள், டிராக்டர் ஆகியவை அதிகமாக வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எனவே அலுமினிய ரெயில்பெட்டிகளை மதுரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ×