search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "all village panchayats"

    • தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேஷன் மூலம் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படுகிறது.
    • பஞ்சாயத்து செயலாளர்கள் ஒரு முனை தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அதிவேக இணையதள இணைப்பு வழங்கக்கூடிய பாரத்நெட் திட்டத்தில், 2-ம் கட்டமாக, தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேஷன் மூலம் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படுகிறது.

    இதற்காக ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படுகிறது. இக்கேபிள், 85 சதவீதம் மின் பாதை வழியாகவும், 15 சதவீதம் தரை வழியாக அமைக்கப்பட உள்ளது.

    இப்பணி நிறைவ டைந்ததும், கிராமங்களில் அகண்ட அலைவரிசை இணைப்புகள், 'வைபை' வசதி, தனி நபர் வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல், அகண்ட அலைவரிசை இணைப்புகளை குத்த கைக்கு விடுதல், செல்போன் டவர்களுக்கு இணைப்பு வழங்குதல் போன்ற முன்னேறிய தொழில் நுட்ப வசதி ஏற்படுத்தப்படும்.

    அனைத்து பஞ்.களிலும் கிராம ஊராட்சி சேவை மையங்கள், வட்டார வளர்ச்சி சேவை மையங்கள் இத்திட்டத்தின் இருப்பு புள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.

    இச்சேவை மையங்களில் இருந்து, 3 கி.மீ., சுற்ற ளவுக்கு அனைத்து அரசு அலுவலக கட்டடங்களிலும் உள்ள இணைய தள வசதிகள் கணக்கெடுக்கப்ப ட்டு வருகிறது.

    இப்பணி முடிந்ததும் பஞ்சாயத்து சேவை மையங்களில் இருந்து ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம், 1 ஜி.பீ.பி.எஸ்., அதிவேக இன்டெர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு, பஞ்சாயத்து செயலாளர்கள் ஒரு முனை தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.

    வருவாய் துறை, வேளாண் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த திட்ட உதவிகள், மானி யங்கள் பெற இ–சேவை மையங்கள் மூலம் மக்கள் விண்ணப்பிக்கின்றனர்.

    ஊரக வளர்ச்சி துறை மூலம் பஞ்சாயத்துகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்கள் மற்றும் கட்டட அனுமதி ஆகிய வற்றுக்கான கட்டணங்களை ஆன்லைன் மூலமே மக்கள் செலுத்த அரசு உத்தர விட்டுள்ளது.

    அரசு பணிகள் அனை த்தும் டிஜிட்டல் மயமாக மாறி உள்ளதால், அனைத்து பஞ்., பகுதிகளுக்கும் விரை வான அதிவேக இன்டெர்நெட் சேவை கிடைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயல்பாட்டுக்கு அனைத்து தரப்பு மக்கள், விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இத்தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
    • கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை காலை 11 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

    கிராமசபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2022 முதல் 31.12.2022 முடிய) குறித்து விவாதித்தல், கிராமஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட 2022-23-ம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தினை டிசம்பர் 31-ந் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதித்தல் மற்றும் இத்திட்டத்தில் சாத்தியமான பணிகள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல்,

    தற்போது உள்ள பணி தொகுப்பின் முன்னேற்றத்தினை பகிர்ந்து கொள்ளுதல், 2022-23-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்றநிலை குறித்து விவாதித்தல், 2023-24-ம் ஆண்டில் புதிதாக தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் மற்றும் வேலை வழங்குவதற்கான தொழிலாளர் மதிப்பீடு இறுதி செய்தல் குறித்து விவாதித்தல்,

    பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடுகணக்கெடுப்பு பணி, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து விளக்குதல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும்.

    அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராமசபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு வட்டாரஅளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சிஅளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ×