search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ajla Tomljanovic"

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா, ஹாலெப் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    3-வது நாளான நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில், ஜப்பான் நாட்டை சேர்ந்த நம்பர் ஒன் புயல் நவோமி ஒசாகா, சுலோவாக்கியா வீராங்கனை அன்ன கரோலினா சிமிட்லோவாவை எதிர்கொண்டார். 

    ஒசாகா 0-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் சிமிட்லோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 



    இதேபோல், ருமேனியா நாட்டை சேர்ந்த நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலெப், ஆஸ்திரேலியா நாட்டின் டோம்ஜனோவிச்சை எதிர்கொண்டார். ஹாலெப், 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் டோம்ஜனோவிச்சை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
    கொரியா ஓபன் டென்னிஸ் தொடரில் நெதர்லாந்தின் கிகி பெர்ட்டென்ஸ் குரோசியா வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். #KoreaOpen
    கொரியா ஓபன் டென்னிஸ் தொடர் தென்கொரியாவில் உள்ள சியோலில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. பெண்களுக்கான இந்த தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பெர்ட்டென்ஸ், தரநிலை பெறாத குரோசியாவின் அஜ்லா டொம்ல்ஜானோவிச்சை எதிர்கொண்டார்.

    2-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டேன்ஸ்க்கு குரோசியா வீராங்கனை கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் செட்டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் கிகி பெர்ட்டென்ஸ் 7(7)-6(2) என கடும் பேராட்டத்திற்குப் பின் கைப்பற்றினார்.



    ஆனால் 2-வது செட்டை 4-6 என அதிர்ச்சிகரமாக இழந்தார். ஆனால் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கக் கூடிய 3-வது செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 6-2 என 3-வது செட்டை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

    பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் தென்கொரியா ஜோடி தைவான் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    ×