search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AirIndia"

    • காதுகளில் முத்து காதணிகள் அணிந்து வரக்கூடாது.
    • மதக்கயிறுகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை

    ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. டாடாவால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக இயங்கியது. பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், இந்த நிறுவனத்தை டாடா நிறுவனம் மீண்டும் வாங்கியது. அது முதல் இந்த நிறுவனத்தை லாபகரமாக மாற்ற ஏதுவாக பல மாற்றங்களை செய்து வருகிறது.

    தனது விமானத்தில் பணியாற்றும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தோற்றப்பொலிவைத் தருகிற வகையில் தோற்றத்தில், ஆடை, அணிகலன்களில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

    இந்த மாற்றங்கள் பற்றிய முழு விவரம் வருமாறு:-

    ஆண் ஊழியர்களுக்கு...

    * தலையில் கண்டிப்பாக ஹேர் ஜெல் தடவி இருக்க வேண்டும்.

    * தலையில் திட்டுத்திட்டாக வழுக்கை இருந்தால் முழுமையாக தினமும் ஷேவ் செய்து கொள்ள வேண்டும்.

    * தலைக்கு 'டை' அடிக்கிற வழக்கம் உள்ளவர்கள் இயல்பான நிறச்சாயத்தைப் பயன்படுத்த வேண்டும்.

    * மணிக்கட்டுகளில், கழுத்தில், கணுக்காலில் மத வழக்கப்படியான கயிறுகளை அணியக்கூடாது.

    விமான பணிப்பெண்கள் கீழ்க்காணும் விதி முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    * காதுகளில் முத்து காதணிகள் அணிந்து வரக்கூடாது. சாதாரணமான தங்கம் அல்லது வைர காதணிகளை அணியலாம்.

    * தலைமுடி அலங்காரத்தைப் பொறுத்தமட்டில் குறைந்த அளவிலான (லோ பன்) கொண்டை கூடாது.

    * ஐ ஷேடோ, லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஷேட் கார்டுகளை கண்டிப்பாக பயன்படுத்தி வர வேண்டும்.

    * ஒற்றை வளையல் அணிந்து கொள்ளலாம். அதில் கற்கள் பதிக்கப்பட்டிருக்கலாம்.

    * மோதிரம் இரு கைகளிலுமே ஒரு செ.மீ. அகலத்துக்கு மேல் இருக்கக்கூடாது.

    * மணிக்கட்டு, கழுத்து, கணுக்காலில் மத வழக்கப்படி கயிறு கட்டக்கூடாது.

    * விமானத்தில் பணியாற்றுகிற விமான பணிப்பெண்கள் புடவைகள் அணியலாம். மேற்கத்திய ஆடைகள் அணியலாம். ஆனால் இரண்டும் மெல்லிய, தோல் நிறத்தில் இருக்க வேண்டும். நீளமான காலுறைகளுடன் அணிய வேண்டும்.

    * அரை செ.மீ. விட்டத்தில்தான் பொட்டு வைக்க வேண்டும்.

    பணியில் இல்லாதபோது, சீருடை அணியக்கூடாது. அதையொட்டிய பிற அணிகலன்களும் அணியக்கூடாது.

    சிப்பந்திகள் பொது இடத்தில் ஷாப்பிங் பை அல்லது பிளாஸ்டிக் பை எடுத்துச்செல்லக்கூடாது.

    இவ்வாறு ஏர் இந்தியா கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில், கரப்பான் பூச்சி இருத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.#AirIndiaFlight #cockroachinfood
    புதுடெல்லி:

    போபாலில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில், கடந்த சனிக்கிழமை ரோஹித் ராஜ் சிங் என்ற பயணி பயணம் செய்துக் கொண்டிருந்தார். பயணிகளுக்கு வழக்கம்போல் உணவு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு இட்லி-வடை மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது. இதில் கரப்பான்பூச்சி ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை உடனடியாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

    இச்சம்பவம் நடந்து இரு தினங்கள் ஆன நிலையில், இன்று ஏர் இந்தியா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பயணியிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

    அதில், ‘நாங்கள் இச்சம்பவத்தை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளோம். இதையடுத்து உடனடியாக அந்த கேட்டரிங் நிறுவனத்துக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. எங்கள் மூத்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயணியுடன் தொடர்பு கொண்டு இது குறித்து பேசினர். மேலும் தகுந்த நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது. #AirIndiaFlight #cockroachinfood 
    ×