search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agriculture Officers"

    • நெல் விதைகளை பொட்டாசியம் குளோரைடு கரைசலில் ஊறவைப்பதால் முளைப்பு திறன் மற்றும் வீரியத்தை அதிகரிக்கும்.
    • காய்கறி விதைகளுக்கு உலர் விதை நேர்த்தி முறையை பயன்படுத்தலாம்.

    ஈரோடு:

    விதை நேர்த்தி என்பது பூஞ்சாணக்கொல்லி, பூச்சிக்கொல்லி போன்ற வற்றை தனித்தோ அல்லது ஒருங்கிணைத்து விதை களின் மேல் இடுதல் அவற்றை மண் மூலம் பரவும் நோய்கள் மற்றும் சேமிப்பில் விதைகளைத் தாக்கும் பூச்சிகள் போன்றவற்றில் இருந்து காத்து தொற்று நீக்குதலே ஆகும்.

    விதை நேர்த்தி செய்வதன் மூலம், பயிர் நோய்கள் பரவாமல் தடுக்கிறது. விதை அழுகல் மற்றும் நாற்றுக்கழுகல் போன்றவற்றிலிருந்து காக்கிறது. முளைப்புத் திறனை மேம்படுத்துகிறது.சேமிப்பில் தாக்கும் பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. மண்ணில் உள்ள பூச்சி களை கட்டுப்படுத்து கிறது.

    உலர் விதை நேர்த்தி மற்றும் ஈர விதை நேர்த்தி என இரு முறைகளில் விதை நேர்த்தி செய்யலாம். நெல் விதைகளுக்கு உலர் விதை நேர்த்தி மற்றும் ஈர விதை நேர்த்தி முறைகளை பயன்படுத்தலாம். காய்கறி விதைகளுக்கு உலர் விதை நேர்த்தி முறையை பயன்படுத்தலாம்.

    நெல் விதைகளை 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 12 மணி நேரம் ஊறவை ப்பதால் முளைப்பு திறன் மற்றும் வீரியத்தை அதிகரிக்கும்.

    மக்காச்சோள விதை களை சோடியம் குளோ ரைடு 1 சதவிகிதம் அல்லது பொட்டாசியம் டை ஹைட்ரஜன் ஆர்த்தோ பாஸ்பேட் 1 சதவிகிதம் கலவையில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பயறு வகைகளுக்கு துத்த நாக சல்பேட், மக்னீசியம் சல்பேட் மற்றும் மாங்கனீசு சல்பேட் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

    விதை நேர்த்தி மூலம் விதை கிருமிகளை நீக்குதல், விதை கிருமிகளை அழித்தல் மற்றும் விதைகளை காத்துக்கொள்ளலாம்.

    விதைகளை நேர்த்தியினை காய மடைந்த விதைகள், நோயு ற்ற விதைகள், சாதகமி ல்லாத மண்ணின் தன்மை கள் மற்றும் நோயற்ற விதைகளுக்கு செய்ய வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்களான ஏ.டி.டி. 36, ஏ.டி.டி. 37, ஏ.டி.டி. 43, ஏ.டி.டி. (ஆர்) 45, ஏ.டி.டி. 53, சி.ஓ. 51, டி.பி.எஸ். 5 மற்றும் ஏ.எஸ்.டி. 16 ஆகியவற்றை பயிரிடலாம். பயிரிடப்படும் விதைகள் தரமானதாக இருந்தால் அதிகளவில் மகசூல் கிடைக்கும்.

    விதையின் தரத்தினை பரிசோதனை செய்ய விதை பரிசோதனை நிலையங்களில் விதை களை கொடுத்து அதன் தரத்தை பரிசோதித்த பின் விதைப்பது நல்லது. அவ்வாறு தங்களிடம் இருப்பில் உள்ள காய்கறி விதைகளை மாதிரி எடுத்து வரும் பட்சத்தில் விதை மாதிரிகளை கீழ்க்காணும் அளவுகளில் கொண்டு வர கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    தக்காளி, காலிபிளவர், கத்தரி, வெங்காயம், முட்டைகோஸ், முள்ளங்கி மற்றும் மிளகாய் விதை மாதிரிகளுக்கு 10 கிராமும், கேரட், பீட்ரூட், கொத்த வரை மற்றும் கீரை வகைகளுக்கு 50 கிராமும்,

    பூசணி, சுரைக்காய், வெண்டை மற்றும் தர்பூசணிக்கு 100 கிராமும், பீர்க்கன், பாகல் மற்றும் புடலை கொடி காய்களுக்கு 150 கிராம் ஆகிய அளவு களில் விதை மாதிரிகள் கொடுத்து விதையின் முளைப்புத் திறன் அறிந்து பயிரிட ஈரோடு விதை பரிசோ தனை நிலைய வே ளாண்மை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாவட்டத்துக்கு ஒரு மாலை நேர உழவா் சந்தை செயல்படும் என்று அறிவித்திருந்தாா்.
    • திருப்பூா் தெற்கு உழவா் சந்தையானது இன்று முதல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையில் செயல்படும்.

    திருப்பூர் :

    தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாவட்டத்துக்கு ஒரு மாலை நேர உழவா் சந்தை செயல்படும் என்று அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பின்படி திருப்பூா் தெற்கு உழவா் சந்தையானது இன்று முதல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையில் செயல்படும்.

    இதில், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தரமான மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் ( சமையல் எண்ணெய், சத்துமாவு வகைகள், நீரா, நாட்டுச் சா்க்கரை) பயறு வகைகள், பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த உழவா் சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    ×