என் மலர்
நீங்கள் தேடியது "Agricultural Strata Scheme"
- விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது.
- தொடர்ச்சியாக வேளாண் அடுக்கு திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
பரமத்தி வேலூர்:
பரமத்தி வேலூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த விவசாயி களுக்கு மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேளாண் அடுக்கு திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
அதன்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை, விதை சான்றளிப்பு துறை உள்ளிட்ட 13 துறைகளில் அனைத்து விவசாயிக ளுக்கும் அனைத்து திட்ட பலன்களும் கிடைக்கச் செய்யும் வகையில் கிரைன்ஸ் என்ற வலைத ளத்தில் விவ சாயிகளுடைய விவரங்கள் குறிப்பாக நில உடமை விவரம் உள்ளிட்ட விவரங்களை சரி பார்க்கப்பட்டு வலைதளங்க ளில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் அந்தந்த கிரா மங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலு வலர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய பெருமக்கள் அனைவரும் தங்களது நில உடமை ஆவணம், ஆதார் அட்டை நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய வற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு விப ரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு வரு வாய்த்துறை மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே இனிவரும் காலங்க ளில் விவசாயிகள் மானியம், சலுகைகள் மற்றும் பேரிடர் நிவாரணம் சம்பந்தமாக இழப்பீடுகள் பெற இயலும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.






