search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agreement in negotiation"

    • நரிக்குடி அருகே அம்மன் கோவில் திருவிழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
    • இரு தரப்பினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் அழகிய மீனாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக பள்ளப்பட்டி கிராமத்தினருக்கும், நரிக்குடியில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் பள்ளப்பட்டி கிராமத்தினர் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக திருச்சுழி வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து வட்டாட்சியர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். 2 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி கோவில் திருவிழாவை நடத்திக் கொள்வதும் என்றும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப் படவும் முடிவு செய்யப் பட்டது.

    வருகிற 3-ந் தேதி மாலை 4 மணிக்கு கோவிலில் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த 5 பேர் மட்டும் பொங்கல் வைத்து சாமி கும்பிட வேண்டும். முக்கிய நிகழ்ச்சிகளின்போது மேள தாளம் இன்றி அமைதியான முறையில் வழிபாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந் தனைகள் விதிக்கப்பட்டது. இதற்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

    மேலும் புரட்டாசி மாத திருவிழா வழக்கமான நடைமுறைகளுடன் நடக்கும் எனவும், வைகாசி மாதத்தில் கோவில் திருவிழாவை அனைத்து ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து வழக்கமான நடைமுறையை பின்பற்றி நடத்துவது எனவும் கூட்டத் தில் முடிவு செய்யப் பட்டது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

    கூட்டம் முடிந்த பின் நேற்று மாலை பள்ளப்பட்டி கிராம மக்கள் கோவில் முன்பு காப்பு கட்டும் விழாவுக்காக வேப்பிலை கட்ட முயன்றனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வேப்பிலை தோரணத்தை கட்ட அனுமதி அளித்தனர். இதையடுத்து பள்ளப்பட்டி கிராம மக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

    இதில் பெண்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு கோவில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பெரியாறு புலிகள் காப்பக சோதனைச் சாவடியில் கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர்.
    • பேச்சு வார்த்தையில், தேக்கடிக்கு தமிழக அரசு பஸ்கள் தடையின்றி செல்ல உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    கம்பம்:

    தமிழக-கேரள அதிகாரிகள் இடையே நடந்த பேச்சு வார்த்தையில், தேக்கடிக்கு தமிழக அரசு பஸ்கள் தடையின்றி செல்ல உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் இருந்து தேக்கடிக்கு சென்ற தமிழக அரசு பஸ்சை தேக்கடியில் உள்ள பெரியாறு புலிகள் காப்பக சோதனைச் சாவடியில் கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர். இந்த நிகழ்வு தமிழக தரப்பில் பதற்ற நிலையை ஏற்படுத்தியது. இதையடுத்து விவசாய சங்கத்தினர் எல்லையில் கேரள வாகன ங்களை தடை செய்யப்போவ தாக அறிவித்தனர்.

    இந்நிலையில் தேக்கடியில் தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், கேரள வனத்துறையினர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து வழக்க மாக வரும் புறநகர் மற்றும் 2 நகர பஸ்களுக்கு தடை இல்லை. எரிபொருள், பணியாளர் நேரம் கருதி குமுளி பணிமனையிலேயே நிறுத்திக்கொள்ளலாம். பஸ்சில் வரும் பயணிகள் ஆனவாச்சல் நிறுத்தம் அல்லது சோதனைச்சா வடியில் நுழைவுச்சீட்டு எடுக்க வேண்டும்.

    பஸ்சில் தடை செய்ய ப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது. தேக்கடியில் பணியாற்றும் அதிகாரிகள், பணியா ளர்கள், மாணவ-மாணவி கள் செல்ல தடையில்லை என முடிவு செய்யப்பட்டது.

    கேரள அரசு தரப்பில் பெரியாறு காப்பக உதவி இயக்குனர் ஷில்பாகுமார், தமிழக அரசு தரப்பில் தேனி அரசு போக்குவரத்துக் கழக கோட்டப்பொறியாளர் (பொறுப்பு) மணிவண்ணன், குமுளி கிளை மேலாளர் ரமேஷ், கம்பம் கிளை மேலாளர் சுப்பிரமணியன் மற்றும் தமிழக-கேரள போலீசார் கலந்து கொண்டனர்.

    ×