search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agatheeswarar Temple"

    • ஆண்டு விழாவையொட்டி 6 கால பூஜைகள் விடிய விடிய நடைபெற்றது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற 100ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு விழாவையொட்டி 6 கால பூஜைகள் விடிய விடிய நடைபெற்றது.

    அகத்தீஸ்வரர் ரிஷப வாகனத்தில் சாமி உலா வந்த போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் சிவராத்திரியையொட்டி பக்தர்கள் விடிய விடிய கண்விழித்து ஈஸ்வரனை தரிசனம் செய்தனர். விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஈஸ்வரனை வழிபட்டனர்.

    விழாவினை முன்னிட்டு காலை முதல் விடிய விடிய அன்னதானம் நடைபெற்றது. அதனை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தொடங்கிவைத்தார். இரவு கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி நடைபெற்–றது. தாராபுரம் துணை போலீஸ் சூூப்பிரண்டு தனராசு மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×