என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "against conversion of"

    • தடையின்றி தொடர்ந்து 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அமைச்சர் சாமிநாதனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • விவசாயிகள் சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் தொட்டம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ஒன்று திரண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே புதுப்பாளையம் ஊராட்சி–யில் இருந்து சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள பாலதொழுவு, பனியம் பள்ளி, ஓட்டப் பாறை மற்றும் புதுப்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சி பகுதிகளுக்கு குழாய்கள் அமைத்து மின் மோட்டார்களை பயன் படுத்தி குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இதற்காக தங்கு, தடையின்றி தொடர்ந்து 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அமைச்சர் சாமிநாதனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனை ஏற்று அன்று முதல் தொடர்ந்து இதுவரை சென்னிமலை அருகே பெரியாண்டிபாளையத்தில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து புதுப்பாளையம், அய்யம் பாளையம், திப்பம் பாளையம், வெங்கமேடு, ஓலப் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க கிழமை) இரவில் இருந்து 12 மணி நேர மும்முனை மின்சாரம் மட்டும் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் தொட்டம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது மின்வாரிய உயர் அதிகாரிகள் விவசாயிகளை தொடர்பு கொண்டு, இது குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பெருந்துறை மின்வாரிய அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருந்தனர். இதையடுத்து விவசாயிகள் பெருந்துறையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர்.

    அங்கு விவசாயிகளிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி–னார்கள். இந்த நிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் அமைச்சர் சாமிநாதனை தொடர்பு கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த தகவலை தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, குடிநீர் தேவைக்காக இதுவரை 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்கியது போல் தொடர்ந்து இனிமேலும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டார்.

    இதனை ஏற்று கொண்ட மின்வாரிய அதிகாரிகள் தொடர்ந்து 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    ×