search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "after being hit by a train"

    • தண்டவாளத்தில் ஆணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இறந்த நபர் யார் போன்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த மாவேலிபாளையம் ரெயில் நிலையத்துக்கும்-சங்ககிரி ரெயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாளத்தில் சம்பவத்தன்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. அந்த நபர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தாரா? என தெரியவில்லை.

    இறந்த நபர் புளூ கலர் அரை பனியன். புளூ கலர் பேண்ட் அணிந்து இருந்தார். வலது கணுக்காலுக்கு மேல் ஒரு கருப்பு மச்சமும், வலது முழங்காலுக்கு கீழே பழைய தழும்பு உள்ளது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×