என் மலர்
நீங்கள் தேடியது "Advisory Committee Meeting"
- தேசிய அளவில் இந்திய தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் நிலையான தொழிலாளர் குழு ஆகியவை செயல்படுகின்றன.
- குழுவில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான க.செல்வராஜ் உள்ளார்.
திருப்பூர்:
அனைத்து தொழிலாளர்களுக்கும், 1947-ம் ஆண்டு தொழிற்தகராறு சட்டத்தின் கீழ் ஏற்படக்கூடிய தொழில் தகராறுகள் மற்றும் பிற தொழிலாளர் நல சட்டங்களின் கீழ் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டது. தேசிய அளவில் இந்திய தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் நிலையான தொழிலாளர் குழு ஆகியவை செயல்படுகின்றன. இவற்றுக்கு துணை அங்கமாக மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் செயல்படுகிறது. இது மாநிலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு செயல்படும்.
அரசு தரப்பு பிரதிநிதிகள் 5 பேர், வேலையளிப்போர் 6 பேர், தொழிலாளர் பிரதிநிதிகள் 6 பேர் மற்றும் 4 எம்.எல்.ஏ.க்கள் அங்கம் வகிப்பார்கள். இந்த குழுவில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான க.செல்வராஜ் உள்ளார். இந்த வாரியத்தின் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
- தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு, மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.
- நாமக்கல் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குநர், சித்ரா, முன்னிலை வகித்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு, மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குநர், சித்ரா, முன்னிலை வகித்தார். விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்து வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)., திட்டத்தின் செயல்பாடுகள் திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும். பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி, போன்ற திட்டப்பணிகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. நாமக்கல் வட்டார வேளாண்மை அலுவலர் மோகன், கால்நடை உதவி மருத்துவர், வெள்ளைசாமி, பட்டு உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் மலர்கொடி. ஆகியோர் பங்கேற்று துறை சார்ந்த மானியத்திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். மேலும் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் அட்மா திட்ட பணியின் முன்னேற்றம் குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும், உழவன் செயலி செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.






