search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADSP Certificate of Appreciation"

    • 25 ஆண்டுகள் எவ்வித புகாரும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றி வரும் போலீசாருக்கு பாராட்டு சான்று வழங்கி கவுரவிப்பது வழக்கம்.
    • குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் அமல்ராஜ், இளமுருகன் ஆகியோர் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியமைக்காக நாமக்கல் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    குமாரபாளையம்:

    போலீஸ் துறையில் தொடர்ந்து 25 ஆண்டுகள் எவ்வித புகாரும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றி வரும் போலீசாருக்கு பாராட்டு சான்று வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதன்படி குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் அமல்ராஜ், இளமுருகன் ஆகியோர் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியமைக்காக நாமக்கல் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் டேவிட், சந்தியா, தங்கவடிவேல், முருகேசன், குணசேகரன், மாதேஸ்வரன், ஏட்டுக்கள் ராம்குமார், சீனிவாசன், செல்வி உள்பட பலர் பாராட்டினர்.

    ×