search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adolescent Rescue"

    • ஒடிசா மாநிலம் சேர்ந்தவர்
    • காப்பகத்தில் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்துள்ளார்.

    சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த ஆதார் அட்டை மூலம் இவர் ஒடிசா மாநிலம் ஜெய்பூர் அடுத்த பைடினாத் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் பாரி பந்தா என்பவரின் மகன் சத்ய ப்ராட்டா பந்தரா (வயது40) என தெரிந்தது.

    இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து இவரை திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் மனநலக் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • சேலம் அருகே உள்ள மூங்கில்பாடி அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் மாயமான இளம்பெண் மீட்டனர்.
    • இவரை சேலம் கன்னங்குறிச்சி யில் உள்ள போதிமரம் ஆதரவற்றோர் இல்லத்தில் பெற்றோர்கள் சேர்த்து விட்டனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அருகே உள்ள மூங்கில்பாடி அடுத்த கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மகள் வனிதா (வயது 38). இவர் சற்று மனநலம் பாதித்தவர். இவரை சேலம் கன்னங்குறிச்சி யில் உள்ள போதிமரம் ஆதரவற்றோர் இல்லத்தில் பெற்றோர்கள் சேர்த்து விட்டனர்.அங்கிருந்த இவர் நேற்று காலை திடீரென மாயமானார். இதுகுறித்த தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று காலை செட்டி சாவடி பகுதியில் சுற்றித் திரிவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வனிதாவை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.

    ×