என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adi Dravidar Student hostel"

    • தேனி-அல்லிநகரம் நகராட்சிப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவ, மாணவியர்கள் விடுதிகளில் அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார்.
    • விடுதிகளில் விளையாட்டு அரங்குகள் அமைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ெதரிவித்தார்.

    தேனி:

    தேனி-அல்லிநகரம் நகராட்சிப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவ, மாணவியர்கள் விடுதிகளில் அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, நகராட்சி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி மற்றும் குன்னூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி) மற்றும் சரவணக்குமார் (ெபரியகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகராட்சிப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் விடுதிகளில் பணியாளர்கள், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, விடுதியில் மாணவ, மாணவிகள் தங்கும் அறை, சமையலறை, அரசின் அட்டவணைப்படி உணவு வகைகள், சமைப்பதற்கு தேவையான உணவு பொருட்களின் இருப்பு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், குளியலறை,

    கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவை குறித்தும், தேனி அல்லிநகரம் நகராட்சி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி மற்றும் குன்னூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள், உள்ளிட்டவைகள் குறித்தும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மாணவ, மாணவிகளின் வகுப்பறைகளுக்கு நேரடியாக சென்று வாசிப்புத்திறன், எழுத்து திறன் குறித்து கலந்துரையாடி ெதரிவித்ததாவது:-

    தேனி-அல்லிநகரம் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் 2 புதிதாக வகுப்பறைகள் கட்டுவதற்கு சுமார் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குன்னூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது.

    மேலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக சுமார் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தேனி மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சுமார் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் மாலை மற்றும் காலை நேரங்களில் கூடுதலாக பயிற்சி வகுப்புகள் நடத்திடவும், விடுதிகளில் காலியாகவுள்ள இடங்களில் பப்பாளி, கீரை போன்ற சத்தான காய்கறிகளை பயிரிட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கிடவும்,

    போதிய இடவசதியுள்ள விடுதிகளில் விளையாட்டு அரங்குகள் அமைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ெதரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவின் உமேஷ் டோங்கரே, முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கடலூர் அருகே ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • கிருமி நாசினிக்கொண்டு தூய்மையாக பராமரிப்பு பணியினை தொடர்ந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

     கடலூர்:

    புதுச்சேரி-கடலூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை கடலூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நடைபெறும் ரூ. 26.8 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகள் நடைபெறுவகையும் குறிஞ்சிப்பாடி ெரயில்வே கேட் பஸ் நிலையம் அருகிலும், கடலூர் விருத்தாசலம் மேம்பாலம் பணி 24 கோடி மதிப்பீட்டில் 68.3 மீட்டர் நீளம் நடைபெறும் மேம்பால பணிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி ஆகியவற்றில் விடுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதியின் அறைகள் மற்றும் சமையல் கூடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார், மேலும் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி மாணவர்களுக்கு உணவு தயார் செய்து வழங்கவும், விடுதியில் தங்கும் அறைகள், சமையலறை மற்றும் கழிவறைகள் தொடர்ந்து தூய்மையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    வடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை மருத்துவரிடம் கேட்டறிந்து , சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனை ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும், மருந்தகங்களில் தேவையான மருந்துகள் இருப்பு உள்ளனவா என்பதனை கேட்டறிந்து, தொற்றாநோய் பிரிவு, மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்க்கொண்டு மருத்துவமனை வளாகங்களுக்குள் நோய் பரவா வண்ணம் கிருமி நாசினிக்கொண்டு தூய்மையாக பராமரிப்பு பணியினை தொடர்ந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது கோட்ட பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) ரவி, வட்டார மருத்துவ அலுவலர் அகிலா மருத்துவமனை மருத்துவர் கனிமொழி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×