search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aanmiga political"

    காமராஜர் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்றால் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.
    திசையன்விளை:

    திசையன்விளையில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    1967-ல் தி.மு.க., காமராஜரை தோற்கடித்தது. அதன்பிறகு தேசிய கட்சிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர். இன்று வரை அதே நிலை தொடர்கிறது. தி.மு.க.,அ.தி.மு.க. என்று மாறி மாறி ஆட்சி நடத்துகிற ஊழல் ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து காமராஜர் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்றால் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

    ஆன்மீக அரசியல் தான் காமராஜர் ஆட்சி. காமராஜரை தோற்கடித்த இந்த தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என அமித்ஷா கூறியுள்ளார். ஊழல் இல்லாத கட்சி என்றால் ரஜினியின் ஆன்மீக அரசியல் கட்சி தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


    தமிழ்நாட்டில் சிலை திருட்டை தடுக்க மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். சிலை திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். சிலை திருட்டை தடுக்க சிறப்பு காவல்படை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் அரசு பாகுபாடு பார்க்கக்கூடாது. இந்து ஏழை மாணவர்களுக்கும் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அதற்காக இந்து மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேட்டியின் போது தென்மண்டல பொதுச் செயலாளர் கார்த்தீசன், மாவட்ட துணைத்தலைவர் சண்முகவேல், ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக திசையன்விளையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்தார். #ArjunSampath #Rajinikanth
    ×