என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aani Biggest Festival"

    • காந்திமதி அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
    • பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் கோவிலின் வெளியே வந்தனா்.

    நெல்லை:

    தென் தமிழ்நாட்டின் ஜீவநதியாம் தாமிரபரணி ஆற்றின் அருகே அமைந்துள்ள டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வெள்ளி சப்பரத்தில் வீதி உலா

    திருவிழாவின் 2-ம் நாளான இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் சுவாமி நெல்லையப்பர் கற்பகவிருட்ச வாகனத்திலும், காந்திமதி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். தொடா்ந்து சுவாமி அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், அஸ்திர தேவா் ஆகியோருக்கு சோடச உபசார தீபாராத னையும், அதனை தொடா்ந்து யாகசாலை தீபாராதனையும் நடை பெறுகிறது.

    பக்தர்கள் தரிசனம்

    பின்னா் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரை வாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகணங்கள் பஞ்ச வாத்ய இசையில் மங்கள வாத்யங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதிஉலா நடைபெறுகிறது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாரா யணமும் பாடப்படும். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தாிசனம் செய்தனா்.

    தேர்களில் சாரம் கட்டும் பணி

    விழாவின் சிகர நிகழ்ச்சி யாக வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. மொத்தம் உள்ள 5 தேர்களில் நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் 3-வது பெரிய தேர் என்ற பெருமை மிக்கதாகும். சுவாமி நெல்லையப்பர் தேரின் எடை 480 டன் ஆகும். இந்த தேர் 85 அடி உயரமாகும்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் கூண்டு களை பிரித்து சுத்தம் செய்யும் பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இன்று தேரில் சாரங்களை பொருத்தி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதில் சுவாமி-அம்பாள் தேர்களில் சாரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பெரிய தேரான நெல்லையப்பர் தேரில் சாரம் கட்டும் பணியையொட்டி அந்த பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டு பொது மக்கள் அந்த வழியாக செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×