என் மலர்
நீங்கள் தேடியது "Aadi Amavasi Special Pujas at"
- அம்மன் கோவில்களில் ஆடி அமாவாசை முன்னிட்டு வாசனை திரவியங்களுடன் அபிஷேக பூஜை நடைபெற்றது.
- மேலும் கோமாதா பூஜை செய்யப்பட்டது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன், பி்ளேக் மாரியம்மன், காமாட்சி அம்மன், சருகு மாரியம்மன், பண்ணாரி அம்மன், ஆதிபராசக்தி, மாகாளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடி அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் போன்ற வாசனை திரவியங்களுடன் அபிஷேக பூஜை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோமாதா பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விழாவில் கூடியிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






