search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A person who sold"

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையை சோதனை செய்தனர்.
    • கடையில் இருந்து ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . அப்போது ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையை சோதனை செய்தனர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட கூலிப், ஹான்ஸ் பாக்கெட், விமல் பான் மசாலா பாக்கெட் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் (57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கடையில் இருந்து ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×