search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A leopard roaming around"

    • வீடியோவில், குடியிருப்பு பகுதிக்குள் புகும் சிறுத்தை, வீட்டின் முன் இருந்த நாயை வேட்டையாடச் செல்கிறது.
    • நாயை வேட்டையாடியதால் சிறுத்தை நடமாட்டம் உறுதியாகியுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வன பகுதியில் தீவன பற்றாக்குறையாலும், தண்ணீா் தேடியும் குடியிருப்பு பகுதிக்குள் வன விலங்குகள் நுழைவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சில நேரங்களில் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.

    இந்நிலையில் ஊட்டியில் உள்ள பாரஸ்ட் கேட் பகுதியில் சிறுத்தை ஒன்று அதிகாலை நேரத்தில் சுற்றி திரியும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த விடியோவில், குடியிருப்பு பகுதிக்குள் புகும் சிறுத்தை, வீட்டின் முன் இருந்த நாயை வேட்டையாடச் செல்கிறது. சப்தம் கேட்டு மற்ற நாய்கள் அங்கு வந்ததால் பாதியில் அந்த சிறுத்தை ஓட்டம் பிடிக்கிறது.

    நாயை வேட்டையாடியதால் சிறுத்தை நடமாட்டம் உறுதியாகியுள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்

    • நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் காமிராக்கள்.
    • அடா்ந்த வனப் பகுதிக்குள் வனத்துறையினா் விடுவித்தனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள அரக்காடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை கடந்த மாதம் சிறுத்தை தாக்கிக் கொன்றது. அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கண்காணிப்பு கேமராக்களில் 2 சிறுத்தைகளின் நடமாட்டம் பதிவாகியிருந்தது.

    இதனையடுத்து, அப்பகுதியில் வனத்துறையினா் சாா்பில் 2 கூண்டுகள் வைக்கப்பட்ட நிலையில், ஒரு சிறுத்தை மட்டும் சிக்கியது. அதனை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்று அடா்ந்த வனப் பகுதிக்குள் வனத்துறையினா் விடுவித்தனா்.

    மற்றொரு சிறுத்தை கிராம பகுதிக்குள் சுற்றி வந்து விளைநிலங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் மக்கள் அச்சத்துடனேயே வசித்து வந்தனர். மேலும் அந்த சிறுத்தையும் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அந்த சிறுத்தை மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்துள்ளது. வெகுநேரமாக அங்கேயே சுற்றி திரிந்த சிறுத்தை பின்னர் வனத்திற்குள் சென்றுள்ளது.

    இந்த காட்சிகள் அப்பகுயில் உள்ள குடியிருப்பில் பொருத்தப்ப–ட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    எனவே குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வரும் சிறுத்தையை கண்காணித்து, கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இதனைத் தொடா்ந்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் 4-க்கும் மேற்பட்ட தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்புப் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

    ×