என் மலர்
நீங்கள் தேடியது "A bear strolling"
- கோத்தகிரி பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
- குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்னர்.
இந்த நிலையில் கோத்தகிரி அரவேனு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் கரடி உலா வந்துள்ளது. கரடி வந்து செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.