search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி
    X

    கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி

    • கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அண்மை காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அண்மை காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகே சுற்றி திரிந்து வருகின்றன.

    அவ்வாறு உலா வரும் கரடிகள் குடியிருப்புகள் மற்றும் கடைகளை உடைத்து சேதம் செய்வது மட்டுமல்லாமல் பொது மக்களை தாக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேசலடா பகுதியில் நேற்று மாலை கரடி ஒன்று சுற்றி திரிந்தது.அந்த கரடி சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கழிவு பொருட்களை சாப்பிட்டது.

    இதனை அந்த வழியாக காரில் சென்ற நபர்கள் பார்த்து, கரடியை விரட்ட முயற்சித்தனர். ஆனால் கரடி செல்லாமல் அங்கேயே நின்று உணவு கழிவு பொருளை தின்றது.

    கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அரவேனு, கேசலடா குடியிருப்பு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

    கரடியை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×