search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATP Finals"

    • ஜோகோவிச் 7-6, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
    • இவர் தனது அரையிறுதி ஆட்டத்தில் 'ரெட்'பிரிவில் முதலிடம் பிடிக்கும் வீரருடன் மோத உள்ளார்.

    துரின்:

    தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'ரவுன்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்போர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் 'கிரீன் பிரிவில் 2-வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் தனது அரையிறுதி ஆட்டத்தில் 'ரெட்'பிரிவில் முதலிடம் பிடிக்கும் வீரருடன் மோத உள்ளார்.

    'கிரீன்' பிரிவில் சின்னர் முதலிடமும், ஜோகோவிச் 2-வது இடமும் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதேவேளையில் 'ரெட்' பிரிவில் டேனியல் மெத்வதேவ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு வீரருக்கான இடத்திற்கு அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இடையே போட்டி நிலவுகிறது.

    • ஏடிபி பைனல்ஸ் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், காஸ்பர் ரூட் மோதினர்.
    • ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.

    துரின்:

    உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. பைனல்ஸ் எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.

    குரூப் சுற்று முடிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ், காஸ்பர் ரூட் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல் அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர்.

    தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-3 என எளிதில் வென்றார்.

    இதன்மூலம் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்திய ஜோகோவிச் கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.

    ஏடிபி டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டம் பெற்றார். #AlexanderZverev #ATPFinals #NovakDjokovic
    லண்டன்:

    ஏ.டி.பி. டூர் டென்னிஸ் இறுதி சுற்று லண்டனில் நடந்தது. ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டம் பெற்றார்.



    அவர் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ வீரரான ஜோகோவிச்சை (செர்பியா) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார். #AlexanderZverev #ATPFinals #NovakDjokovic
    ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை ஜப்பான் வீரர் நிஷிகோரி வீழ்த்தினார். #ATPFinal #RogerFederer #KeiNishikori
    லண்டன்:

    ‘டாப்-8’ வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலை நகர் லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)-9-வது இடத்தில் இருக்கும் நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோர் மோதினார்கள். 1 மணி 27 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் நிஷிகோரி 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் பெடரரை வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கினார்.



    ‘குயர்டன்’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 7-6 (7-5), 7-6 (7-1) என்ற நேர்செட்டில் 7-ம் நிலை வீரர் மரின் சிலிச்சை (குரோஷியா) தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி 6 நிமிடம் நீடித்தது.  #ATPFinal #RogerFederer #KeiNishikori
    ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. #ATPFinal #RogerFederer #NovakDjokovic
    லண்டன்:

    டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக அமெரிக்காவின் ஜான் இஸ்னர் சேர்க்கப்பட்டார்.

    முன்னாள் வீரர்கள் குகா குயர்டன், லெய்டன் ஹெவிட் ஆகிய இரு முன்னாள் வீரர்களின் பெயரில் குரூப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ‘குயர்டன்’ பிரிவில் 5 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), மரின் சிலிச் (செர்பியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), ‘ஹெவிட்’ பிரிவில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டொமினிக் திம் (ஆஸ்திரியா), நிஷிகோரி (ஜப்பான்), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வீரர்களும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

    விம்பிள்டன் சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான செர்பியாவின் ஜோகோவிச் சூப்பர் பார்மில் உள்ளார். அதனால் இந்த முறை அவர் வாகை சூடுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.

    கவுரவமிக்க இந்த போட்டியில் 16-வது முறையாக களம் காணும் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 7-வது முறையாக பட்டத்தை வெல்வதில் தீவிரம் காட்டுகிறார். கோப்பையை வென்றால், சர்வதேச போட்டியில் அது அவரது 100-வது பட்டமாக அமையும்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.61 கோடியாகும். போட்டி கட்டணமாக ரூ.1½ கோடி, லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.1½ கோடி வீதம் வழங்கப்படும். இறுதிப்போட்டி வெற்றிக்கு ரூ.9¼ கோடி அளிக்கப்படும். ஆக, தோல்வியே சந்திக்காமல் கோப்பைக்கு முத்தமிடும் வீரர் மொத்தம் ரூ.19½ கோடியை பரிசாக அள்ளலாம். அத்துடன் 1,500 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும்.

    இன்றைய முதல் நாளில் ஆண்டர்சன்-டொமினிக் திம் (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி), பெடரர்-நிஷிகோரி (நள்ளிரவு 1.30 மணி) ஆகியோர் மோதுகிறார்கள்.

    இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடிகள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறது. இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா, லியாண்டர் பெயஸ் உள்ளிட்டோர் தரவரிசையில் பின்தங்கி இருப்பதால் இந்த போட்டிக்கு தகுதி பெறவில்லை.
    ×