search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 years"

    • குள்ளம்பட்டி வாய்க்கால் பாலம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மினி ஆட்டோ மோதியதில் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்து தலையில் படுகாயம் அடைந்த முருகன் உயிரிழந்தார்.
    • காயம் அடைந்த நிர்மலா, மற்றும் 2 வயது குழந்தை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள மோட்டூர் காட்டுவளவு ஆவணியூரை சேர்ந்தவர் முருகன் (வயது 35). தறிதொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி காலை தனது மொபட்டில் மனைவி நிர்மலா (23) மற்றும் 2 வயது மகளுடன் வட்ராம்பாளையத்தில் இருந்து ஆவணியூரில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    குள்ளம்பட்டி வாய்க்கால் பாலம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மினி ஆட்டோ மோதியதில் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்து தலையில் படுகாயம் அடைந்த முருகன் உயிரிழந்தார். காயம் அடைந்த நிர்மலா, மற்றும் 2 வயது குழந்தை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த விபத்து குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய காவேரிப்பட்டி கிராமம் ஒக்கிலிப்பட்டி கீழ்மோட்டூ ரை சேர்ந்த அருணாசலம் (58) என்பவரை ைகது செய்தனர்.

    இது குறித்து சங்ககிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விபத்தை ஏற்படுத்திய மினி ஆட்டோ டிரைவர் அருணாசலத்திற்கு 3 ஆண்டு ெஜயில் தண்டனையும், ரூ.2500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

    • ரேஷன் பொருள்கள் அனைத்தும், கிழிந்த சாக்குப் பைகளில் எடை குறைவாக நூல் மாற்றம் செய்யாமல் வழங்கப்படுகின்றன.
    • ஒரே இடத்தில் நீண்ட காலமாக செயல்பட்டதால் இவா்கள் ஊழலுக்கு உறுதுணையாக செயல்படும் நிலை உள்ளது.

    திருப்பூர்:

    கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் நகா்வுப் பணியில் உள்ள ஊழியா்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட கூட்டுறவுப் பணியாளா் சங்கம் (சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து சிஐடியூ. கூட்டுறவுப் பணியாளா் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் கௌதமன், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டம் முழுவதும் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருள்கள் அனைத்தும், கிழிந்த சாக்குப் பைகளில் எடை குறைவாக நூல் மாற்றம் செய்யாமல் வழங்கப்படுகின்றன. இது சம்பந்தமாக புகாா் தெரிவித்தும், ரேஷன் பொருள்கள் உரிய அளவு முறையாக வழங்குவதில்லை. எனவே இது குறித்து உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் நகா்வுப் பணியில் உள்ள ஊழியா்கள் 3 வருடங்களுக்கு மேலாக பணியாற்றுவோரை உடனடியாக பணி மாற்றம் செய்ய வேண்டும். மேலும் ஒரே இடத்தில் நீண்ட காலமாக செயல்பட்டதால் இவா்கள் ஊழலுக்கு உறுதுணையாக செயல்படும் நிலை உள்ளது. ஆகவே, காலதாமதம் செய்யாமல் இவா்களைப் பணி மாற்றம் செய்ய வேண்டும்.

    திருப்பூா் மாநகராட்சி உள்ளிட்ட நியாய விலைக் கடைகளுக்கு வழங்கக்கூடிய மண்ணெண்ணெய் 100 லிட்டா் குறைவாக ஒதுக்கீடு செய்து, அதில் 5 லிட்டா் வரை குறைவாக வழங்கப்படுகிறது. கோதுமை மாத இறுதியில் வழங்காமல் முதல் வாரத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

    ×