search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 people killed"

    • மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி- தாராபுரம் ரோட்டில் சென்றார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சிவானந்தாபுரம் அருகே உள்ள மணி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சுதீஸ் (வயது 19).

    இவர் அந்த பகுதியில் ஓர்ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பிரவீன் என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுதீசை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நீலாம்பூர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி நல்லம்மாள் (வயது 60). சம்பவத்தன்று இவர் தனது கணவரின் ெமாபட்டில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நல்லம்மாள் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (47).

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி- தாராபுரம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கணேசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×