search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "24-hour treatment"

    • காய்ச்சலுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
    • விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்உத்தரவிடப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, இராதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மழைக்காலத்தினால் பரவும் காய்ச்சலை கட்டுப்ப டுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என மாவட்ட கலெக்டர் மோகன் இன்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு வழங்க ப்படும் சிகிச்சை உரிய முறையில் உள்ளதா என அவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், புறநோயாளிகள் பதிவு செய்யும் இடம், மருந்தகம் உள்ளிட்ட பகுதி களை ஆய்வு செய்து, காய்ச்சலினால் சிகிச்சை பெறுபவர்கள், காய்ச்சலுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். சிகிச்சைக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகளின் இருப்பு குறித்து கேட்டறிந்ததுடன், காய்ச்சல் பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறியிருப்பதா து:-

    விழுப்புரம் மாவட்ட த்தில் 13 வட்டா ரங்களில் 65 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையங்கள் த ற்போது மழைக்காலம் மற்றும் பருவநிலை மாற்றம காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இதனால் உடனடியாக அனைத்து தலைமை மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிபுரிந்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் தொற்றுக்கு தேவை யான மருந்து மற்றும் மாத்திரைகள் அதிகமாக வைத்துக்கொள்ளவும், கூடுதலாக மருந்து, மாத்தி ரைகள் தேவை ப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பொதுமக்கள் எவரு க்கேனும் காய்ச்சல் அறிகுறிகளான அதிகப்படியான உடல்வெப்பநிலை, வாந்தி, மயக்கம், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகாமையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையினை அணுகி தேவையான மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும். மேலும், 65 வயதிற்கு மேற்பட்ட இருதய பாதிப்பு, நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தொடர்காய்ச்சல் அல்லது சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உடனடியாக சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தனிமனித இடைவெளி முக்கவசம் அனிந்து செல்ல வேண்டும் எனவும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் பொதுஇடங்களில் எச்சில் துப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த காய்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் தேவையான முன்னெ ச்சரிக்கை நடவடி க்கை எடுக்க ப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த ஆய்வின்போது, துணைஇயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி, மருத்துவர்கள் மரு.ஆறுமுகம், மரு.கெவிலியா, மரு.சரண்யா உட்பட பலர் உடனிருந்தனர்.

    • குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • நடமாடும் மருத்துவக்குழுக்களை உருவாக்கி கிராமங்கள் தோறும் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.

    கடலூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தொடர் காய்ச்சல், இருமல், சளி, தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மருத்துவமனைகள், நகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நடமாடும் மருத்துவக்குழுக்களை உருவாக்கி கிராமங்கள் தோறும் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

    ×